உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 273 " கார்முகிலாய்ப் பொழிவானைப் பொழிந்த முந்நீர் கரப்பானைக் கடியநடை விடையொன் றேறி ஊர்பலவும் திரிவானை ஊர தாக ஒற்றியூர் உடையனாய் மற்றும் ஆண்டு பேரெழுத் தொன்றுடை யானைப் பிரமனோடு மாலவனும் இந்திரனும் மந்திரத்தா லேத்தும் சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.” இந்தத் தலத்தைப் பற்றி அந்த நாயனார் பாடியருளிய அமற்றொரு திருத்தாண்டகம் வருமாறு: " பளிங்கின் நிழலுட் பதிந்த சோதியானைப் பசுபதியைப் பாசுபத வேடத் தானை விளிந்தெழுந்த கலந்தரனை வீட்டி னானை வேதியனை விண்ணவனை மேவி வையம் அளந்தவனை நான்முகனை அல்லல் தீர்க்கும் அருமருந்தை ஆமா றறிந் தென் உள்ளம் தெளிந்தெறும்பி யூர் மலைமேல் மாணிக் கத்தைச் செழஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே.” அந்த நாயனார் பாடியருளிய வேறொரு திருத்தாண் டகம் வருமாறு: . - . . . . - பாரிடங்கள் உடன்பாடப் பயின்று நட்டம் பயில்வானை அயில்வாய குலம் ஏந்தி நேரிடும்போர் மிகவல்ல நிமலன் தன்னை நின்மலனை அம்மலர்கொண் டயனும் மாலும் பாரிடந்தும் மேலுயர்ந்தும் காணா வண்ணம் பரந்தானை நிமிர்ந்துமுனி கணங்கள் ஏத்தும் சீரெறும்பி யூர்மலைமேல் மாணிக் கத்தைச் செழுஞ்சுடரைச் சென்றடையப் பெற்றேன் நானே." தி-18