உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெரிய புராண விளக்கம்-7.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருநாவுக்கரசு நாயனார் புராணம் 69. முடியார் மதியரவம் வைத்தார் போலும் மூவுலகும் தாமேயாய் நின்றார் போலும் செடியார் தலைப்பலிகொண் டுழல்வார்.போலும் செல்கதிதான் கண்ட சிவனார் போலும் அடியார்நஞ் சுண்டிருண்ட கண்டர் போலும் கங்காள வேடக் கருத்தர் போலும் - அடியார் அடிமை உகப்பார் போலும் - அணியாரூர்த் திருமூலட் டான னாரே. ” வேறு ஒரு திருப்பதிகத்தில் வரும் ஒரு திருத்தாண்டகம் வருமாறு : ’ முந்திய வல்வினைகள் தீர்ப்பான் தன்னை மூவாத மேனிமுக் கண்ணி னானைச் சந்திரனும் வெங்க திரும் ஆயி னானைச் சங்கரனைச் சங்கக் குழையான் தன்னை மந்திரமும் மறைப்பொருளும் ஆனான் தன்னை மறுமையும் இம்மையும் ஆனான் தன்னை அந்தரனை ஆரூரில் அம்மான் தன்னை அறியா தடிநாயேன் அயர்த்த வாறே. ' வேறு ஒரு திருப்பதிகத்தில் உள்ள ஒரு திருத்தாண்டகம் வருமாறு : 線 பிறப்போ டிறப்பென்றும் இல்லாதான் காண் பெண்ணுருவோ டானுருவம் ஆயி னான்காண் மறப்படும்என் சிந்தைமருள் நீக்கினான் காண் வானவரும் அறியாத நெறிதந் தான்காண் நறப்படுபூ மலர்தூபம் தீபம் நல்ல - நறுஞ்சாந்தம் கொண்டேத்தி நாளும் வானோர் சிறப்போடு பூசிக்கும் திருவாரூரில் திருமூலட் டானத்தெம் செல்வன் தானே. " மேலும் ஒரு திருப்பதிகத்தில் வரும் ஒரு திருத்தாண்டகம் வருமாறு :