பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

இஸ்லாமியக் கோட்பாட்டின்படி வானம், பூமி, சந்திர சூரிய மற்றும் கோளங்கள் முஹர்ரம் பத்தாம் நாளன்று இறைவனால் படைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.

உலகில் முதன்முதல் மழை பெய்ததும் முதல் மனிதராகிய ஆதாமும் ஹவ்வாவும் இறைவனால் படைக் கப்பட்டதும் முஹ்ரம் பத்தாம் நாளன்றுதான்.

‘நோவா’ என அழைக்கப்படும் நூஹ் (அலை) ஊழிப் பெரு மழையிலிருந்து பிற உயிரினங்களைக் காக்க பன்னெடுங்காலம் கடலில் மிதந்து திரிந்து இறுதியாகக் கரை இறங்கிய நாள் முஹர்ரம் பத்தாம் நாளாகும்.

‘டேவிட்’ எனும் தாவூது (அலை) அவர்களின் பாவ மன்னிப்பை இறைவன் ஏற்றுக் கொண்டதும், ஒரே இறைவன் எனும் உயரிய இறைத் தத்துவத்தைப் பரப்பி, தன் மகனையே இறைவனுக்காகப் பலியிடத் துணிந்த ஏப்ரஹாம் எனும் இபுறாஹீம் நபியின் அரிய இறை பணிக்காக ‘கலீல்’ எனும் பட்டத்தை இறைவனிடமிருந்து பெற்றதும் இதே முஹர்ரம் பத்தாம் நாள் அன்றுதான்.

‘ஜீசஸ்’ எனும் ஈசா (அலை) அவர்களை இறைவன் விண்ணகத்திற்கு உயர்த்திப் பெருமைப்படுத்தியதும் இதே முஹர்ரம் பத்தாம் நாளன்றுதான்.

நபிகள் நாயகத்தின் பேரர் ஹாசைன் (ரலி) இஸ்லாமிய சமுதாய நலனுக்காகவும் மார்க்கத்தை நிலை நிறுத்து வதற்காகவும் கர்பலா என்னுமிடத்தில் தன் குடும்பத்தோடும் மக்களோடும் எதிரிகளால் கொல்லப்பட்டதும் முஹர்ரம் பத்தாம் நாளன்றுதான். நீதியையும் நேர்மையையும் காக்க இறைவழியின் எந்தத் தியாகத்தையும் செய்யப் பின்னடையக் கூடாது என்ற உண்மையை உணர்த்தும் நிகழ்ச்சியாக இத்துயரச் சம்பவம் அமைந்தது.