பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

129

இந் நிகழ்வால் முஹர்ரம் மாதச் சிறப்புக் கூடவோ குறையவோ இல்லை. இறுதித் தூதர் நபிகள் நாயகம் (சல்) அவர்கட்கும் இறுதி வேதம் திருக்குர்ஆனுக்கும் பின்னர் நிகழ்ந்த எந்தச் சம்பவமும் புனிதமானவையோ போற்றத்தக்க முக்கியத்துவமுடையதோ அல்ல.

இவ்வாறு முஹர்ரம் மாதம் இஸ்லாமிய மார்க்க அடிப்படையிலும் இறைநேசர்களின் வாழ்க்கை வரலாற்று அடிப்படையிலும் போற்றத்தக்கப் புனித மாதமாகவும் புத்தாண்டுப் பெருநாளாகவும் அமைந்து மகிழ்வூட்டுகிறது. இந்நாளில் இறையருள் பெற இரு கரமேந்தி துவா (இறை வேட்டல் செய்வோமாக.

நன்றி : தினமணி

9