பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

இறைவனைப் பற்றிய அச்சவுணர்வும் அவனுள் அழுத்தம் பெறுகிறது.

இறைவன் தன் திருமறையில் ‘ல அல்லாஹும் தத்தஹூன்’ (இதனால் நீங்கள் இறையச்சமுடையோர்களா கலாம்) எனக் கூறியுள்ளதிலிருந்து இறையச்சவுணர்வைப் பூரணமாக உள்ளத்தில் உருவாக்கி நிலைபெறச் செய்வதே நோன்பின் முழு முதல் நோக்கமாகும்.

இறைவன் மனிதனுக்கு விலக்கிவைத்தவைகளின்றும் அறவே விலகியிருப்பதோடு, அல்லாஹ் இட்ட கட்டளையே இம்மியும் பிசகாது முழுமையாக, மனக் கட்டுப்பாட்டோடு நிறைவேற்றி, அவனது அன்பையும், அவனளிக்கும் வெகுமதியையும் பெறுவதற்கான பயிற்சிக் களமாக ரமளான் மாதம் அமைகிறது.

மனக் கட்டுப்பாட்டை
உருவாக்கும் பயிற்சிக்காலம்

இஸ்லாமிய மார்க்க அடிப்படையில் இந்நோன்பு கடமையாக்கப்பட்டாலும், உளவியல் அடிப்படையிலும் மருத்துவவியல் அடிப்படையிலும் மிகுபயன் விளைவிப்பனவாக அமைந்துள்ளன என்பதை அறிவியல் நோக்கோடு அணுகும்போது தெளிவாகப் புலனாகிறது.

நோன்பு நோற்பவர் பகல் முழுவதும் எதையுமே உண்ணாமலும், பருகாமலும் புகைக்காமலும் அளவுக்கதிகமான மனக் கட்டுப்பாட்டுடன் தன் வழக்கமான வாழ்க்கைப் போக்கினின்றும் மாறுபட்டு வாழகிறார். தன் அன்றாட அலுவல்களிலும் தொய்வின்றி ஈடுபடுகின்றார். இதனால் மன உறுதி மிக்கவராகத் தன்னை ஆக்கிக் கொள்கிறார். “எல்லா வகையிலும் மனத்தைக் கட்டுப்படுத்துவது தான் தூய்மையான போராட்டம் (ஜிஹாதுல் அக்பர்)” என்றார் நபிகள் நாயகம்.

4