பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

69

படைப்பு நாள்

இஸ்லாமியக் கோட்பாட்டின்படி வானம், பூமி, கதிரவன், சந்திரன், கோளங்கள், சொர்க்கம், நரகம் ஆகிய அனைத்தும் முஹர்ரம் பத்தாம் நாளன்றே படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த நாளில்தான் இறைவனின் பேரருளால் முதன் முதலாக உலகில் மழை பெய்தது. மனித குலத்தின் முதல் தந்தையாகிய ஆதாம் (அலை) அவர்களும் அன்னை ஹவ்வாவும் இறைவனால் படைக்கப்பட்டது இதே முஹர்ரம் பத்தாம் நாளன்றுதான். அது மட்டுமல்ல ஆதித் தந்தை ஆதாமும் ஹவ்வாத் தாயாரும் சுவன பதிக்கு இறைவனால் அனுப்பப்பட்டதும் இதே முஹர்ரம் பத்தாம் நாள் அன்று தான்.

நன்றி : தினமணி