பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

75

இந்நிலையை மாற்றி பல்வேறு சமயத்தவர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில் செயல்பட முனைந்தார் பெருமானார் (சல்) அவர்கள்.

முதல் சர்வசமயக் கூட்டம்

முஸ்லிம்களையும் முஸ்லிம் அல்லாதவர்களான கிறிஸ்துவர்கள், யூதர்கள் மற்றும் பல்வேறு சிறு சிறு சமயங்களைச் சார்ந்தவர்களையும் கொண்ட சர்வமதக் கூட்டத்தைப் பெருமானார் முதன் முறையாகக் கூட்டினார்.

மதினா நகர் மக்கள் சகிப்புணர்வின் அடிப்படையில் புரிந்துணர்வோடு ஒருங்கிணைந்து வாழ வேண்யடிதன் அவசியத்தை அப்போது வலியுறுத்தினார்.

வெளியார்களின் தாக்குதலிலிருந்து தங்களைக் காத்துக்கொள்ளவும் தங்களுக்கிடையே மதமாச்சரியங் களோ, சண்டை சச்சரவுகளோ, இன்றி அமைதியாக வாழ வழி காண வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத் தினார். பல்வேறு சமயங்களை, இனங்களைச் சார்ந்தவர் களாயினும் தங்களின் சக்தி சிதறாமல் ஒருங்கு திரண்டு அமையுமாறு செயல்பட வழிகாண வற்புறுத்தினார்.

முதல் பொது அரசு

பெருமானரது ஆலோசனை அவர்களைச் சிந்திக்கத் தூண்டியது. விழிப்புற்ற பல்வேறு சமயத் தலைவர்களும் இவ்வகையில் தங்களுக்கு ஆக்கப்பூர்வமாகத் தொடர்ந்து வழிகாட்ட பெருமானாரை வேண்டினர். இதற்காக மதினா நகரின் தலைவராகவும் அண்ணலாரைத் தேர்ந்தெடுத்தனர். நகர அரசு ஒன்றை அமைத்து வழிகாட்டுமாறும் வேண்டினர். மதினாவின் வரலாற்றிலேயே அணைத்துத் தரப்பு மக்களும் ஒன்றிணைந்து அரசமைத்ததும், தங்களுக்கென ஒரு பொதுத் தலைவரைத் தேர்ந்தெடுத்ததும் அதுவே முதன் முறையாகும்.