பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

எடுத்துரைக்காதது நாம் செய்து வரும் தவறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்நிலையை ஓரளவு மாற்றக் கருதி, பெருமானார் (சல்) அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ‘தினமணி நாளிதழுக்கு “பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி அனுப்பியிருந்தேன். இரண்டு நாட்களுக்குப் பின் ‘தினமணி’ நாளிதழ் ஆசிரியர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள் இரவு 9.00 மணிக்கு என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். நான் அனுப்பியிருந்த கட்டுரையை அப்போதுதான் படித்து முடித்ததாகவும் உடனே தொடர்பு கொண்டதாகவும் கூறியதோடு, தொடர்ந்து “உங்கள் கட்டுரையைப் படித்தபோது, எனக் கிருந்த பல ஐயப்பாடுகள் அகன்று விட்டன. ‘பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டக் கருத்துகள் இன்றைய உலகு முன் உரத்த குரலில் ஒலிக்கப்பட வேண்டியவை. இக்கருத்துகள் பரப்பப்படாததாலும், மற்ற சமயத்தவர்களால் அவை உரிய முறையில் உணரப்படாததாலும் - ஏன் உணர்த்தப்படாததாலுமே தேவையற்ற பல பிரச்சினைகள் இன்று நம்மிடையே தலைதூக்கிக் கூத்தாட்டம் போட நேர்ந்துள்ளது. நீங்கள் கட்டுரை மட்டும் எழுதியதாக நான் கருதவில்லை. இதன் மூலம் இன்றையத் தேவையை நிறைவு செய்யும் அற்புதமான சமூக சேவையை செய் திருப்பதாகவே கருதி மகிழ்கிறேன். உடனே உங்களைப் பாராட்ட வேண்டும் என்ற உந்து தலாயே உங்களுக்குப் போன் செய்தேன்” என தன் அறிவுப் பூர்வமான உள்ளுணர்வுகளை என்னோடு பகிர்ந்து கொண்டார்.

கட்டுரை அடுத்த இரண்டொரு நாளில் வெளியான பின் பல வாசகர்கள் கட்டுரையைப் பாராட்டியும் விமர் சித்தும் ‘தினமணி’ வாசகர் பகுதிக்கு கடிதங்கள் எழுதியிருந்தார்கள். அவைகளில் ஒரு கடிதம் இவ்வாறு இருந்தது.

“மணவை முஸ்தபாவின் “பெருமானாரின் பிற சமயக் கண்ணோட்டம்” என்ற கட்டுரை அற்புதமாக எழுதப்பட்டி