பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



நோன்பு தரும்
மாண்பு


ரமளான் ‘ஈதுல் ஃபித்ர்’ நன்னாளை நோன்புப் பெரு நாளாகவும் ஈகைத் திருநாளாகவும் உலகெங்கும் வாழும் முஸ்லிம் பெருமக்கள் உவகையோடு கொண்டாடி மகிழ்கின்றனர்.

தீமையைச் சுட்டெரிக்கும் ரமளான்

‘ரமள்’ என்பதினின்றும் உருவான ‘ரமளான்’ என்ற அரபுச் சொல்லுக்கும் ‘சுட்டெரித்தல்’ என்பது பொருளாகும். ரமளான் மாதம் தீமைகளைச் சுட்டெரித்து மக்களை நன்மையின்பால் கொண்டு சேர்க்கும் மாதமாகவும் அமைகிறது. இறைமறை பிறந்த இம்மாதம் முழுமையும் அதிகமான தொழுகைகள், விரதமாகிய நோன்பு, ஏழை எளியோர் பங்காகிய ஜகாத் போன்ற இஸ்லாமிய அடிப்படைக் கடமைகளை செயல் வடிவில் முஸ்லிம் பெரு மக்கள் முனைப்போடு கடைப்பிடிப்பதால் அகத்தில் முளைவிடும் தீய உணர்வுகளை புறத்தே சூழ்ந்து வரும் தீமைகளை ஒருங்கே எதிர்த்துப் போராடி, அவற்றை முற்றாகச் சுட்டெரித்து வெற்றி கொள்ளும் மாதமாக அமைகிறது. எனவே, இம்மாதம் முடிந்து அடுத்து வரும் முதல் நாளை ஒவ்வொரு முஸ்லிமும் வெற்றிக் களிப்போடு கொண்டாடி மகிழ்கின்றார்.