பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பெரும்பாணாற்றுப்பண்ட விளக்கவுரை

உறிகள் தொங்கும் காவடி சுமந்ததனால் உண்டாகிய; மறுப்படு மயிர்ச்சுவல்-தழும்பு மிக்க மயிர் முளைத்த தோள்களையும்; மேம்பால் உரைத்த ஒரி-பால்களில் சிறந்த,பசுவின்பால் தடவிய மயிரினையும்; ஒங்கு மிசை -மிக உயர்ந்த உச்சியையுடைய கோட்டவும் கொடியவும்-கொம்புகளிலும் கொடிகளிலும் மலர்ந் துள்ள; காட்ட பல்பூ-காட்டு மலர்கள் பலவற்றை: விரைஇ மிடைந்த படலைக்கண்ணி-கலந்து கட்டிய கலம்பக மாலையினையும்; ஒன்று அமர் உடுக்கைஉடுத்த ஒற்றை உடையினையும்; கூழ் ஆர் இடையன்கூழ்உணவு உண்ணும் இடைமகன்; கன்று அமர் நிரை யொடு-கன்றுகளை விரும்பும் ஆனிரைகளோடு, கானத்து அல்கி-காட்டிலே தங்கி, அம் நுண் அவிர் புகை கமழ-அழகாய், நுண்ணியதாய் எழும்புகை மணக்க கைமுயன்று-கையால் க ைட ந் து: ஞெலிகோல் கொண்ட-திக்கடைக் கோலில் உண்டாக்கிய; பெரு விறல் ஞெகிழி-பேராற்றல் வாய்ந்த கொள்ளி யான, செந்தித் தோட்ட-சிவந்த தீயால் துளை யிட்ட கருந்துளைக்குழலின்-கரிய துளைகளையுடைய குழலில் எழுப்பிய்; இன் தீம் பாலை முனையின் -இனிய கேள்விச். சுவைமிக்க பாலை என்னும் பண்ணோசையை வெறுக்கின்; கு மி ழி ன் புழல் கோட்டுத் தொடுத்த-குமிழ மரத்தின் உள்துளை வாய்ந்த கொம்பில் வளைத்துக் கட்டிய; மரல் புரி நரம் பில்-மரலின் நாராகிய நரம்பினை உடைய, வில் யாழ் இசைக்கும்-வில்வடிவான யாழ் இசைக்கும்; விரல் எறி குறிஞ்சி-விரலாலே எறிந்து எழுப்பும் குறிஞ்சி என்னும் பண்ணை, பல்கால் பறவை-பல கால்களையுடைய வண்டுகள்: கிளைசெத்து ஒர்க்கும்-தம் இனம் எழுப்பும் ஓசையாகக் கருதிக் காது கொடுத்துக் கேட்கும்; புல் ஆர் வியன் புலம் போகி-புல் நிறைந்த அகன்ற மே ய், புலத்தைக் கடந்து போய்.) -