பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பெரும்பாணாற் துப்படை விளக்கவுரை

திருக்கும் உடையைப் போல், அவர் வறுமையை வெளிப் படுத்தி விடுவது வேறு எதுவும் இல்லை. உங்களை அருகில் அழைத்து நோக்குவதற்கு முன்பே, நீயும் நின் சுற்றமும் உடுத்திருக்கும் உடை நிலை, நீங்கள் எத்தகைய கொடிய வறுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை உணர்த்தி - விடுமாதலின், திரையன் முதற்பணியாக, நீங்கள் உடுத்

திருக்குழ் வேலப்பாசி வேர் போல, நைந்து போயிருக்கும். கந்தல் ஆடைகளை அகற்றி விட்டு, மெல்லிய நூலால் நெய்யப்பட்ட பாலாடை போன்ற பளபளக்கும். வெள்ளாடைகளை அவரவர் உடல் அளவிற்கேற்புடைய வற்றை அளித்து உடுத்து விடுவன்.

புத்தாடை உடுத்துப் புதுப் பொலிவோடு நிற்கும் உங்களின் அடுத்த தேவை வயிறார உணவு என்பதை அறிந் திருக்கும் திரையன், உங்களை அழைத்துக் கொண்டு அடுக் களையுள் புகுவன். ஆங்குக் கொடுவாள் ஏந்திக் ஏந்திக் தாழ்ப்பு ஏறிய கையில், கொடுவாள் ஏந்திய நெடிய, பெரிய ஆள் உங்களை வரவேற்பன். அவன் வடிவையும், அவன் கைக் கொடுவாளையும் கண்டு அஞ்சத் தேவையில்லை. அவன், அம்மடைப் பள்ளியின் தலைவன். ஆட்டுக்கறி கோழிக் கறி என வகை வகையான கறிகளைக் கொந்தி அரிவதற்குத் துணை புரியும் கொடுவாளே அவன் கையில் இருப்பது. திரையன் முன்னே நடந்து, அடுக்களையுள் ஆக்கக் குவித்து வைத்திருக்கும் அரிசியையும், ஆக்கி வைத் திருக்கும் உணவு வகைகளையும் காட்டிக் கொண்டே செல்ல அைைனத் தொடர்ந்து செல்லும் நீங்கள், ஆங்கே கொட்டி வைத்திருக்கும் அரிசியைக் காண்பீர்கள் அது, தாள் ஈரம் அற நன்கு பழுத்து, கொட்டை கொட்டையாக முற்ற விளைந்த செந்நெல் அரிசி. அது, கல்லும், மண்ணும், கருக் காயும், கலப்பும் நீக்கித் தூய்மை செய்து வைக்கப்பட்