பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 189

இணையாகப் பூட்டப்படும் குதிரையோடு ஒத்துத் தொழில் செய்வன, நால்குடன் பூட்டி-நான்கை ஒரு சேரப் பூட்டின, அரித்தேர் நல்கியும் அமையான்பொன்னால் செய்த தேரைத் தந்தும், கொடைப் பணி யில் மனநிறைவு கொள்ளானாய், செருத்தொலைத்துபகையரசர் தொடுத்த போர்களை வென்று அழித்து, ஒன்னாத் தெவ்வர்-தன்னோடு ஒத்து வராத அப் பகைவர், உலை விடத்து ஒழித்த-தோற்ற போர்க் களத்தில் விட்டுச் சென்றனவும், விசும்பு செல் இவுளி யொடு-விண்ணில் பறப்பதுபோல் பாய்ந்து செல்லு வனவுமாகிய குதிரைகளோடு, பசும்படை தரீஇ-புதிய சேணமும் கொடுத்து, அன்றே அவன் பரிசில் விடுக்கும்அவன் அரசவ்ை புகுந்த அன்றே பரிசில் அளித்து வழி அனுப்புவன். .