பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரும்பான ற்றுப்படை

அகவிரு விசும்பிற் பாயிருள் பருகிப் பகல்கான் றெழுதரு பல்கதிர்ப் பருதி காய்சினந் திருகிய கடுந்திறல் வேனிற் பாசிலை யொழித்த பராஅரைப் பாதிரி

வள்ளிதழ் மாமலர் வயிற்றிடை வகுத்ததன்

உள்ளகம் புரையும் ஊட்டுறு பச்சைப் பரியரைக் கமுகின் பாளையம் பசும்பூக் கருவிருந் தன்ன கண்கூடு செறிதுளை உருக்கி யன்ன பொருத்துறு போர்வைச்

சுனைவறந் தன்ன இருள்துங்கு வறுவாய்ப் பிறைபிறந் தன்ன பின்னேந்து கவைக்கடை நெடும்பனைத் திரடோள் மடந்தை முன்கைக் குறுந்தொடி யேய்க்கு மெலிந்துவீங்கு திவவின் மணிவார்ந் தன்ன மாயிரு மருப்பின்

பொன்வார்ந் தன்ன புரியட்ங்கு நரம்பின் தொடையமை கேள்வி இடவயிற் றழிஇ வெந்தெறற் கனலியொடு மதிவலந் திரிதரும் தண்கடல் வரைப்பில் தாங்குநர்ப் பெறாது பொழிமழை துறந்த புகைவேய் குன்றத்துப்

கல்லென் சுற்றமொடு கால்கிளர்ந்து திரிதரும் புல்லென் யாக்கைப் புலவுவாய்ப் பாண! - பெருவறங் கூர்ந்த கானம் கல்லெனக் கருவி வானம் துளிசொரிந் தாங்குப்

5

10

15

பழுமரத் தேரும் பறவை போலக் 20