பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கா. கோவிந்தனார் 57

எத்தனை பெரிய இடையூறுகள் நேர்ந்தாலும் சோர்ந்து விடாது முயன்று முடிக்கவல்ல உறுதியாளர்கள். உள்ளத்தில் உறுதியும் உடலில் உரமும் முடிக்கவல்ல உறுதியாளர்கள் உள்ளத்தில் உறுதியும் உடலில் உரமும் எவ்வளவுதான் சிறந்தனவாய் அமைந்து விட்டாலும் அவற்றிற்குத் துணை புரியல்ல படைக்கலங்களும் தேவை என்பதை உணர்ந்து, ஏற்றபடைக்கலங்களையும் உடன் கொண்டே செல்வர். காலில் அணிந்திருக்கும் செருப்பு, முழங்கால் வரையும் மறைத்துவிடும் சட்டை, அவர்மேனியை மூடிக்காத்துக் கிடக்கும். ஆறலைகள்வரோடு , போரிட்டு, அவர்தம், வில்லாற்றலை முரித்து அழிக்க மேற்கொண்ட போர்களில் ஒரேர் வழி, அவர் அம்புபாய்ந்து உண்டாக்கிய புண்வடுக்கள், மார்பிற்கு அணியாகி அழகு தரும். விரிவரியான கோடுகள் விளங்க, பண்ணப்பட்ட அச்சு அவர் மார்பின் குறுக்கே வரிந்து கட்டப்பட்டிருக்கும்; அது, மலையின் குறுக்கே ஊர்ந்து ஏறும் மலைப்பாம்பினை நினைவூட்டுவதாய் இருக்கும். அக்கச்சில், இடது கைப்புறமாக, வெள்ளிய கைப்பிடி பொருத்தப்பெற்ற கூரியவாள் கட்டித்தொங்க விடப்பட்டிருக்கும். இடையில் உடுத்தியிருக்கும் ஆடை, தம்மை மறந்துபோரில் ஈடுபட்டிருக்கும் போதும் நெகிழ்ந்து அவிழ்ந்து விடாதவாறு இறுகக்கட்டப்பட்டிருக்கும்: அவ்வுடைக்குள் ஒரு குத்து வாளும் செருகப்பட்டிருக்கும். இவ்வளவிற்கும் மேலாக, நீண்ட் பெரிய வேற்படையைக் கையில் ஏந்திச் செல்வர். இத்தனை படைக்கலங்களையும் பயன்படுத்துவதற்கேற்ற பரந்து அகன்ற தோளாற்றலும் உடையராகிய அவ்வீரர்களைப் பார்த்த. பரிசில் பெற்று மீள்வோன் அகக்கண்முன், அவன் கடந்து வந்த மலை நாட்டுத் தெய்வம்ாம் முருகன் காட்சி அளிக்கவே அவர்களை, அவனாகவே மதித்து மகிழ்ந்ததோடு அக்காட்சி: இன்பம். பெரும்பாணன் உள்ளத்திலும் பெருக்கெடுக்கும் வகையில், விளங்க எடுத்துரைத்தான்.

s