பக்கம்:பெரும்பாணாற்றுப்படை-விளக்கவுரை.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பெரும்பாணாற்றுப்படை விளக்கவுரை

படம் எடுத்துப் பாயும் பாம்பைக் கண்டு பயந்து விடாமல் மாறாக, அதைப் பற்றி ஈர்த்துப் பாறை மீது மோதி உயிர், போக்குவ்ர். நீர் உண்டு சூல்கொண்ட கருமேகத்திடையே. கண்ணொளி கெடுக்கும் பேரொளியோடு தோன்றிக் காது. கள் செவிடுபடப் பேரொளி எழுப்பும் இடியொலி கேட்கும் நிலையிலும், கலங்காது தம்பணி மேற்கொள்வர்.

மகளிர் இயல்பே இது என்றால், ஆடவர் வீரம்பற்றிக் கூறவும் வேண்டுமோ? வெறும் உடல் உழைப்பால் பெற லாகும், ஊதியம் கொண்டு உடல் வளர்ப்பதை விரும்பார்: தம் ஆண்மையை நிலைநாட்டிப் பிறரை வெற்றி கொண்டு கொணரும் ஆக்கத்தால் மட்டுமே, தம் உடல் ஆக்கத்தைப் பெருக்க விரும்பும் பேருள்ளம் வாய்க்கப் பெற்றவர். அதற். கேற்ப வாட்போரில் வல்லவர். வாளோடு பிறந்தவர் எனக் கூறுமாறு, உண்ணும் போதும், உறங்கும்போதும்,எப்போதும் வாளேந்தியே காணப்படுவர்.

இம்மறக்குடி மாந்தரின் தலைவனாக வருபவன், அரும்பு மீசையுடைய கட்டிளங் காளையாக, காண்பவர், ஆண் புலி தானோ என எண்ணி அஞ்சும் தோற்றப் பொலிவு உடைய வனாகத் திகழ்வான். அவன் கீழ்ப் பணிபுரியும் வீரர்கள், குறிப்பிடும் விலங்கின் மீது குறி தவறாது பாய்ந்து பற்றி ஈர்த்து வரும் ஆற்றலும், தன்னை வளர்ப்பவன் பின், அவன் நிழல்போல் தொடர்ந்து செல்லும் அன்பும் வாய்க்கப் பெற்ற நாய் போன்றவர்கள்; அவன் ஏவும் இடம் சென்று ஏவிய பணியை முடித்து மீளவல்லவர்; அவனை ஒருபோதும் பிரியாப் பேரன்புடையவர். கையில் எப்போதும் வில்லேந்தி இருப்பவர். - - - - *

ஆண்மையும் ஆற்றல்மிகு வீரர்களும் இருப்பதால், அவன், தன் ஆணைகேட்டு அதற்கேற்ப நடந்து கொள்ள மறுக்கும் அரசனுக்குரிய அண்டை நாட்டினுள், ஆங்குள்ள அரிய காவல் கண்டு அஞ்சாது, இரவோடு இரவாகப் புகுந்து