பக்கம்:பெற்றோர் கொடுத்த பெருங்கொடை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

தான் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை வளர்ந்து கருவுண்டாவதற்குத் தக்கவாறு முதிர்ச்சி அடைவதற்குள் மூன்று வகையாக மாறுதல் அடைந்து ஒவ்வொன்றும் 24 நிறக்கோல்களுடன்தான் வெளியாகின்றன.

எந்தச் சமயத்தில் அண்டம் வெளியாகிறதென்பதை நிச்சயமாகச் சொல்வதற்கில்லை. கருமூலக் குழாயில் இது வந்து கொண்டிருக்கும்போது புணர்ச்சியால் வெளியான விந்தணுக்களில் ஒன்று இதைச் சந்தித்தால் பூரிக்கிறது. அவ்வாறு பூரித்துக் கருவாகும் அண்டத்திலே பழையபடி நிறக்கோல்கள் 24 ஜோடிகளாய் விடுகின்றன. அவைகளில் பாதி விந்தணுவிலிருந்து வந்தவை. மற்றப் பாதி அண்டத்திலிருந்தவை. இவ்வாறு பூரித்த அண்டத்திலுள்ள நிறக்கோல்களுக்கு ஆணும் பெண்ணும் சரிசமானமாகக் காரணமாகின்றனர், பாரம்பரியத் தன்மைகள் அமையவேண்டுமானால் இந்த நிறக்கோல்களின் மூலமாகவே அமைய வேண்டும். நிறக்கோல்களில் பாரம்பரியத் தன்மையைத் தாங்கிக் கொண்டிருக்கும் மிகமிக நுட்பமான அங்கங்கள் இருக்கின்றன. அவற்றைத்தான் ஜீன்கள் (Genes) என்று சொல்லுகிறார்கள். ஜீன்களின் கூட்டத்தாலேயே நிறக்கோல்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் ஜீன்களைத் தனியாகக் காண்பது அரிது.