பக்கம்:பேசும் ஓவியங்கள்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாணமென்னடி - பெண்ணே
நாணமென்னடி?

தனித்திருந்தால் நகைக்கின்றாய்
தவிப்பினாலும் துடிக்கின்றாய்
எனினும் பிறர் கண்டுவிட்டால்
இளமான் போல் மறைகின்றாய்

நாணமென்னடி - பெண்ணே
நாணமென்னடி?

தொட்டு தொட்டு பயின்றதெலாம்
தொலைவிருந்து பார்த்ததெலாம்
நட்புறவின் செயல்களன்றோ
நானுனக்கு என்பதன்றோ

நாணமென்னடி - பெண்ணே
நாணமென்னடி?