பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

காரணமாக அதிகமாகப் பெருத்திருக்கும். மார்பகங்களைக் சுற்றிலும் ஒருவகையான கருமை படர்ந்து காணப்படும்; முலேக்காம்புகள் (Nipples) விரைப்பாகவும் கனமாகவும் பழுப்பு நிறம் கொண்டதாகவும் விளங்கும்.

இத்தகைய மாற்றங்கள் சிலரது உடல் வாகுக்கு ஏற்ப கருவுற்ற இரண்டாம் வாரத்திலேயே காணப்படுவ தும் உண்டு. அழுத்தம் காரணமாக முலைக்காம்புகளில் £pos.jsp&ujrot flysuth (Secretion of Colostrum) &#13 தொடங்கும். குத்துவலியும் அடிக்கடி ஏற்படும்.

5. சாதாரண காலங்களைவிட, கருவுற்ற இக்காலத் தி ேல உணர்ச்சித் துரண்டுதல்கள் அதிகப்படியாக இருக்கும்.

6. கருப்பை பெரிதாகும்போது, பெண்ணின் மர்ம ஸ்தானம்-சிறுநீர் கழிக்கும் பகுதி-சற்றே வெளித் தள்ளிக் காணப்படும்.

கருத்தரித்திருக்கும் நில நிர்ணயமாக எப்படியும் பன்னிரண்டு வாரங்கள் பிடிக்கும். இக்கெடு தாண்டியதும், கர்ப்பவதி தகுந்த லேடி டாக்டர்களிடம் சோதனை செய்யப்பட்டு, அவர்களின் யோசனைகளுக்கு ஏ ற் ப நடந்து, அவர்கள் சொல்லும் மருந்துகளை உட்கொண்டு: ஒழுகுதலும் நலம் பயக்கும். உடலையும் சிறு நீரையும் சோதித்துப் பார்க்கும் டாக்டர்கள் கர்ப்ப நிர்ணயம் பற்றி: நிச்சயித்துவிடுவார்கள் -

இப்போது, வயிற்றுக்குறிகளைக் கவனிக்கவேண்டும். மூன்று மாதங்கள் கழிந்த பின்னரே வயிறு பெருக்க ஆரம்பிக்கிறது. இடை எலும்புக் குழியை விட்டு கருப்பை வெளியேறுவதற்கு மூன்று மாதங்களுக்கு மேலாகும். ஆகையால் அது வரை வயிறு பெரிதாகக் காணப்ப்டாது.

- 2 سیس- فt}