பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

வேண்டிய நீர் தாமதம் ஆனலோ, அல்லது தடைப் பட்டாலோ, உடனடியாக நீர்ப்பரிசோதனை செய்வது அத்தியாவசியமாகும். இ ைத ஒருபோதும் மறக்கக் கூடாது !

அவ்வப்போது தேக உஷ்ண நிலையையும் கவனித்துக் கொள்ளவேண்டும்.

8. உறக்கமும் ஓய்வும் .

கர்ப்பவதிகளுக்கு ஒய்வு மிக முக்கியம்; இரவிலும் பகலிலும் நல்ல ஓய்வு கொள்ளல் வேண்டும். அமைதி யான-காற்ருேட்ட வசதியுள்ள இடத்தில் கர்ப்பவதிகள் உணவுக்குப்பின் ஒன்றிரண்டு மணிநேரம் ஒய்வெடுத் தால், பிறகு அது உதவும். அம்மாதிரிக் காலங்களில் உடைகள் இறுக்கமாக இருக்கவே கூடாது. குறைந்த அட்சம் ஒரு நாளைக்கு எட்டுமணி நேரமாவது உறக்கம் கொள்ளவேண்டும்.

9. ஊர்ப்பயணம்

கருவுற்ற பெண்கள் இயன்ற மட்டில் கார்களிலும் பஸ்களிலும் பயணம் செய்வதைக் குறைக்க வேண்டும். அதிலும், கருவுற்ற நிலை நிர்ணயமாகும் அந்த நான்கு மாதங்கள் வரை நெடுந்துாரம் வண்டிகளிலோ அல்லது பஸ்களிலோ பிரயாணம் செய்வது தவறு. இதல்ை உடலில் அயர்வும் அசைவும் ஏற்பட்டு, கர்ப்பம் கலந்து விடவும் சிதைந்துவிடவும் வழியிறக்கக் கூடும். அது போலவே, எட்டுமாதத்துக்கு மேலேயும் பயணம் செய்வது தவறு. ஊர்ப்பிரயாணம் த விர்க்க முடியாததாளுல் டாக்டரின் ஆலோசனைக்குப் பின்னரே அதை ஸ்திரப் படுத்திக்கொள்ள வேண்டும். கூடிய்ள் ٬۰۰٬۰۰۰ تا ۰نسه செல்வது நல்லது. .

டியவரை ரயிலில்