பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Şū

கும், ஏன்-நாட்டுக்கும் கூட அது ஒரு வரப்பிரசாதமாகக் கருதப்படுகிறது.

கர்ப்பிணி எனும் ஸ்தானம் பெறும் பெண் அளவான புஷ்டிமிக்க-உயிரூட்டிகள் நிறைந்த ஆகாரம் சாப்பிட வேண்டும். இதுவே தலையாய கடமையாகும்!

அவளது அடுத்த பாதுகாப்பு அவளது மனம்தான். தாயின் மனநிலையைப் பொறுத்துத்தான் கருவில் வளரத் தொடங்கும் சிசுவின் உள்ள ப்ப ங் கு ம் அமையத் தொடங்குகிறது. ஆகவே, தாய் எந்தவிதப் பயமும் கொள்ளாமல் நெஞ்சுரத்துடனும் மனச்சந்து ஷ்டியுடனும் இருக்கவேண்டும். தாய் கோழையானல், சிசுவுக்கும் அத்தகைய குணச்சேர்க்கை உருவாகிவிடும். பிரசவத்தை ஒரு தவமாகவும் ஒரு கடமையாகவும் கொள்ளவேண்டும். பிரசவத்தை ஒரு பயங்கரக் கண்டமாகக் கருதி, அதற் கென்றே கருவுறுவதைத் தவிர்க்கும் அபூர்வமானஅதிசயமான பெண் ஜடங்களைப் பற்றிய சிந்தனையை இவர்கள் கொள்ளலாகாது! தாயாக விரும்பாத எந்த ஒரு பெண்ணும் உலகின் எந்த ஒரு முடுக்கிலும் கூட இருந்த தில்லை; இருக்கப் போவதும் இல்லை.

'ஈன்று புரந்தருதல் என்தலைக்கடனே' என்று தாயின் வாய்மொழியாகச் சொல்லவில்லையா புறம்?

மேசக்கை முதல் வாரத்திலேயே தோன்றி விடுவதும் உண்டு. - -

கர்ப்பவதிகளுக்குரிய முக்கிய அடையாளங்கள் ருது வாதல் நின்று விடுவதும் மசக்கை உண்டாவதும் ஆகும். கர்ப்பும் உருவாகியிருப்பதாக உணர்ந்தவுடன் அப் பெண் தகுந்த லேடி டாக்டரை அணுகிச் சோதித்துக் கொள்ளுவதே சிறந்தது! அவ்வப்போது ரத்தப்