பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53

ஆகவே அவர்கள் மற்ற எவ்விதப் பயத்தையும் வளர்த்துக் கொள்ளாமல், தன்னம்பிக்கையுடனும் சந்தோஷத்துடனும் புதிய ஜீவனே வரவேற்பதில் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும். அனுப்பிரமாணமுள்ள ஒரு சிறு முட்டை மானுடரூபம் எடுத்து அவதாரம் பூ ணும் மகிமைக்கு ஈடேது? -

பார்த்தீர்களா, அதற்குள் முப்பது நாட்கள் மாயமாக மறைந்து விட்டனவே ! -

2. இரண்டாம் மாதம் :

'மசக்கை”யின் ஆட்சி ஆரம்பிப்பது இரண்டாம் மாதத்தில்தான். இப்போதுதான் அ த ன் வேலைகள் சுறுசுறுப்படையத் தொடங்கும். மசக்கை என்பது எவ் வகை நோயும் அன்று. கருப்பையில் விளைந்திருக்கும் ஒரு மாற்றத்திற்கு-உடல் ரீதியானதொரு விந்தை மாறு தலுக்கு ஓர் அறிகுறியாகவும், அந்த மாறுதலின் விளை வாகவுமே மசக்கை உண்டாகிறது.

சிலருக்கு கருத்தரித்த அன்றே மசக்கை உண்டாகும். பெரும்பாலும் மூன்று மாதங்களின் முடிவுக்குள் அது தீர்ந்துவிடும். வாந்தி ஏற்படுவதுதான் இயல்பு. முதற் பிள்ளைக்குத் தாயாகப் போகிற பெண்களுக்கு மசக்கை யின் கெடுபிடி கூடுதலாகவே இருக்கும். : ...

புளிப்பு எக்கச்சக்கமாகத் தேவைப்படும். அத் தேவையே ஒரு வெறியுணர்வாகவும் இருக்கும் !

மசக்கை என்பது எந்த வகையான வியாதியையும் சேர்ந்ததல்ல; கருப்பையிலும் அதை ஒட்டிய குடல் பகுதி களில் ஏற்படும் மாறுதலின் விளைவாகவே இது ஏற்படுவ தால், ஒழுங்கான முறையில் உணவு வகைகளைச் சாப் பிட்டு தக்கபடி ஒய்வுகொண்டு, உடல் நலம் பேணில்ை