பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

மிதமான உணவுதான் முக்கியம். வைட்டமின் சத்துக்கொண்ட ஆகாரங்கள்தாம் நல்லது, அதிகமாக உண்டால், அஜிர்ணம், வயிற்றுப் பொருமல், புளியேப் பம், நித்திரையின்மை, நெஞ்செறிவு முதலான சில்லறைத் தொந்தரவுகள் ஏற்படும். தங்களுக்குத் தேவைப்பட்ட ஆகாரம் உண்டாலே, அதன் ஊட்டம் கருப்பச் சிசுவுக் கும் போதுமானதுதான் !

அவர்களின் அயர்வுக்கும் களைப்புக்கும் அதுவே மாற்ருகும் ! -

இறைச்சி வகைகளே கர்ப்பிணிகள் தவிர்ப்பது மெச்சத் தகுந்தது. அவற்றிலுள்ள விஷச்சத்துக்கள் கர்ப்பவதி களுக்கு உகந்தனவாக அமைவதில்லை. ஜீரணிப்பது மிகவும் கஷ்டம்.

ஆனல் காய்கறி வகைகளில் இறைச்சியைக் காட்டி லும் அதிக ஊட்டம் இருக்கின்றது. பிரசவ காலம் நெருங்க, நெருங்க குடல்கள் மந்தப்பட்டுப்போகிற தருணங்களிலே, மரக்கறிகளிலுள்ள உலோகச் சத்துகள் ஜீரண சத்தியை அதிகப்படுத்துமல்லவா ? காய்கறிகளை பச்சையாக உண்ணுவது மிக நல்லது. வசதி இருப்பவர் கள் ஒரு கோப்பை ஆரஞ்சுப் பழரசத்தை விடி காலையில் சாப்பிட்டுவிட்டு, ரேடியோவைத் திருப்பலாம். செய்தி களில் நாட்டம் கொள்ளலாம். வசதியில்லாதவர்கள் நீராகாரத்தில்துளி உப்பும் சிறிதளவு வெந்தயமும்போட்டு அப்படியே உட்கொண்டுவிட்டு, வீட்டு அலுவல்களைக் கவனிக்கலாம் ! -

தேன், எலுமிச்சையைத் தொடர்ந்து உபயோகிக்க லாம். > - ஊட்டம் மிக்க "ஆப்பிள் ഋങ്ങl-്ക്ക് முடிந்தவர் கள்-சாப்பிட முடிந்தவர்கள் அல்ல-வாங்கமுடிந்தவர் கள் பகுதி பகுதியாகச் சாப்பிடலாம்.