பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

பதம் கொண்ட கலோரிவகை ஆகாரங்களையும் உபயோகப் படுத்தவேண்டும். காற்ருேட்டம், உஷ்ணம் ஆகியவை: உடலுக்கு இன்றியமையாதவை. சோம்பல்படாமல், வீட்டு அலுவல்களைப் பார்ப்பதும், காற்ருட உலாவுவதும் முக்கியம். வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். விக்கம் குறையச்செய்ய இவை உபசாந்திகளாகும். வீங்கிய கைகால்களைத் தொங்கப்போட்டபடி இருக்கலாகாது. தானுந்தர் தைலம் தடவலாம். சாதாரண வீக்கமானல், மெல்லத் தடவிவிட்டால் சரியாகிவிடும். உணவு மூலமே வழி செய்து கொள்ளமுடியும்.

கன்னத் தாடைகளில் வீக்கம் கண்டால் டாக்டர்களை நாடவேண்டும்.

மலம் கழிவதற்கு பழவகைகளும் வெந்நீரும் உதவும். அடிக்கடி தண்ணிர்-பச்சைத் தண்ணிர் குடிக்கலாம். பார்லி அரிசியை வேக வைத்த தண்ணிர் சிறு நீரைக் கழிக்க உதவும். இதை அடிக்கடி குடிப்பது நல்லது.

நீர்க் கடுப்பு:

இப்போது நீர்க்கடுப்பும் ஏற்படும். இதற்கும் பார்லித் தண்ணிர்தான் பரிகாரம். பெரிய கம்பெனிகளின் விலை உயர்ந்த சோடா குடிக்கலாம். பிறப்புறுப்பை இளஞ் சூடுள்ள நீரால் கழுவி விடலாம். தொப்புளிலும் நகக் கண்களிலும் சுண்ணும்பு தடவுபவர்களும் இல்லாமல் இல்லை. எக்காரணத்தைக் கொண்டும் மூத்திரப் பையைச்

யுடன் வைக்கக்கூடாது. இப்பையின் அழுத்தத் கருப்பப்பையில் உள்ள சிசு பாதிக்கப்படும்.