பக்கம்:பேறுகாலப் பிரச்சனைகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95

கர்ப்பிணிகள் தொடக்கத்திலேயே-அதாவது இந் நோயின் சிறு அறிகுறி தோன்றியதுமே தக்க சிகிச்சை செய்து கொண்டால், தாயும் சேயும் நல்லபடியாகப் பிழைத்து எழலாம். - -

கருப்ப இசிவுக்குத் தொடர்பாக வலிப்பு நோய் (epilespy), Hfeřols fur (Hysteria), sists+$p$$g fiř# சோகை (uraimia), நீரிழிவு, மூளை விஷஜூரம், விஷக் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படலாம்.

“...வலிப்பு நோய் வருமுன், அதைக் தக்க சிகிச்சை களால் வராமல் தடுக்கவேண்டும். இரத்த அழுத்தம் ஒட்டியிருந்தாலும், மூத்திரத்தில் புரதம் வெளிப்பட்டா லும், கருப்பிணி வீட்டில் அதிகம் நடமாடக்கூடாது. தினசரி ஒரு அவுன்ஸ் பேதி உப்பை, ஒரு அவுன்ஸ் வெந்நீரில் கலக்கி, இரத்த அழுத்தம் (blood pressure) குறைந்து சரியான நிலைக்கு வரும்வரை பேதிக்குச் சாப்பிடவேண்டும், பார்லி தண்ணிர், பழரசம், குளுகோஸ் சர்க்கரை கலந்த நீர் இவற்றையே ஆகாரமாகக் கொள்ள வேண்டும். கால்ஷியம், வைடமின் பி, குளுகே ஸ் முதலிய சக்திகளே ஊசிமூலம் (injections) உடலில் செலுத் திக் கொண்டு, தைராய்ட் மாத்திரைகளை உட்கொண்டு ரத்த அழுத்தத்தை மிதப்படுத்தவேண்டும்!’ என்று தம் முடைய பத்துமாதம்’ என்ற நூலில் சொல்கிருர் டாக்டர் எஸ். திரிபுரசுந்தரி அவர்கள் (லக்ஷ்மி). அமெரிக்காவில் இந்நோய் 500ல் ஒருவருக்கே உண்டாவதாக டாக்டர் ஸ்போக் (Dr. Spock) கூறியுள்ளார். -

இசிவு நோயின் காரணமாக, கல்லீரல், மூத்திரக்காய் கள், மூளை, நஞ்சுக்கொடி, சுவாச கோசங்கள் போன்ற வற்றில் அழற்சி ஏற்படும்; நஞ்சுக்கொடியில் உதிரக்கசிவு உண்டாகி வடியும். ரத்தக்கட்டிகள் ஏற்படும். ரத்தப் போக்கு பிரசவத்தில் வெளிப்படும்.