பக்கம்:பொங்கற்பரிசு.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வம்மின் வாழ்த்துவம் !


ண்டு பொன்னொளி வாரி இறைத்துமே
வண்டு மூசிடா வான்வெளிப் பொய்கையிற்
கொண்டல் மேலெழும் கூம்பிடாப் பொன்மலர்
கண்டு வாழ்த்துவம் வாழ்த்துவம் வம்மினே 1


செந்நெல் நீள்வயல் திஞ்சுவை வாழையும்
கன்னல் மாபலாக் காண்பவர் யாரையும்
'தின்ன வா'வெனச் செப்பிடச் செங்கதிர்
இந்நாள் வந்ததை! வாழ்த்துவம் வம்மினே! 2


ஓடை பாடிட ஒண்மயில் ஆடிடக்
காடு வான்மலை எங்கும் களியெழ
வாடை ஒட்டியே வந்த பரிதியைக்
கூடி வாழ்த்துவம் வாழ்த்துவம் வம்மினே! 3


நீரில் மூழ்கிநி மிர்ந்திடு கன்னியர்
கூர்வி ழிகளைக் குட்டை மலரெனக்
காரி வண்டினம் மொய்க்கவ ருங்கதிர்
ஊரிற் கண்டனம் வாழ்த்துவம் வம்மினே! 4


கோதை சூடிய கோதைநல் வாழ்த்தொலி
ஓதை 'பொங்கலோ பொங்க' லென் றுயர்ந்துமே
காதை இன்பக் களிப்பினல் ஆழ்த்துமால்!
வாதை தீர்ந்ததை வாழ்த்துவம் வம்மினே! 5

22
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/30&oldid=1146746" இலிருந்து மீள்விக்கப்பட்டது