பக்கம்:பொங்கற்பரிசு.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அலர்ந்தது பொற்கதிர் !


லைகடல் மீது பனித்திரை விலக்கி
அலர்ந்தது பொற்கதிர்! வாழி!
உலகினில், ஊனில், ஊனிடை உயிரில்
உவகையின் மிகுதியைக் கண்டோம் !
கலகலப் போடு 'பொங்கலோ பொங்கல்!'
கலந்தது விண்ணிடை எங்கும்!
மலரணி பெண்கள், கன்னியர், காளை
வாழ்த்தொலி யோடுநம் வாழ்த்தே ! 1


உழவனை வாழ்த்தி, ஒளிக்கதிர் வாழ்த்தி,
உயிரினம், கார்முகில் வாழ்த்திப்
பழகிய அன்னைத் தமிழ்மொழி வாழ்த்திப்
பைந்தமிழ் நாட்டினை வாழ்த்தி,
அழகிய தாய்மார் இணையுடன் ஆட,
அருவிகள், வண்டுகள் பாட
ஒழுகிய பொங்கல் நெய்யினைச் சுவைக்கும்
ஒண்சிறார் வாழ்த்தொடு வாழ்த்தே ! 2

24
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/32&oldid=1146749" இலிருந்து மீள்விக்கப்பட்டது