பக்கம்:பொங்கற்பரிசு.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாழிய பொற்சுடர் !


வானில் வந்தது! வந்தது

பொற்சுடர்! வாழிய ! நம்

ஊனில் வந்தது நல்லுயிர்!
வந்தது நீளின்பம்!

கானில் வந்தது முட்புதர்
பைங்கொடி பூநாற்றம்!

தேனில் வந்தது வண்டினம்;

செந்தமிழ் இசையூற்றே!

1




பரிதி பூத்திடப் பூத்தது

முல்லையும் நீள்குன்றும்!

மருதம் பூத்திடப் பூத்தது
மங்கையர் விழிநீலம்!

சுருதி பூத்திடப் பூத்தது
வாயெல்லாம் நற்பொங்கல்!

பெரிது பூத்தது! பூத்தது

நாடெல்லாம் நல்வாழ்த்தே!

2

 <poem>

பெரும்பூப் பூத்தது! பூத்தது
பொங்கலும் ஊனுடலிற்!

கரும்பு பூத்தது! பூத்தது

செந்நெலும் ! கார்குழலில்
26
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/34&oldid=1147061" இலிருந்து மீள்விக்கப்பட்டது