பக்கம்:பொங்கற்பரிசு.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தோன்றியதே!


தேனைப் பொழிந்தான் புதுப்பரிதி !
தைத்திங்கள் வாழியவே!

ஊனில், எலும்பில், உயிரில்,
உலகத்(து) உயிரினத்தில்,

வானிற் பெரும்பொங்கல்! பொங்கலோ
பொங்கல் மகிழ்ச்சியொலி

கூனல் நிமிர்த்தி நமையெலாம்
வாழ்விக்கத் தோன்றியதே
1


பொன்னாக்கி கீழ்க்கடலே, நம்நாட்டை நல்வாழ்வைப்
பொன்னாக்கி வந்தான் புதுப்பரிதி! - மின்னே!
தெருவெல்லாம் பொங்கலோ பொங்கலாம்! வாழ்த்தி
வருவோம்; வளம்பெறு வோம்! 2


 பொன்மழையாம்! வந்ததுபார் புதுப்பரிதி!
தேனெங்குஞ் செங்கரும்பு! தீந்தமிழா! -ஊனிடையில்
வந்ததுவே நீளின்பம்! வந்ததுவே நம்பொங்கல்!
வந்ததை வாழ்த்துவ மே! 3

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொங்கற்பரிசு.pdf/38&oldid=1147052" இலிருந்து மீள்விக்கப்பட்டது