இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எழுந்தது பரிதி ! கீழ்க்கடல் வானம்
- இருட்புதர் நீள்கழி யாவும்
- இழிந்தது பைம்பொன் ! ஒளிச்சுடர் வாழ்க!
- இங்குள திராவிடர் இல்லில்
- வழிந்தது பொங்கல் வாழிய என்றும் !
- மலரடிக் கன்னியர் நெஞ்சில்
- அழுந்திய மகிழ்ச்சி; ’பொங்கலோ பொங்கல் !
- அளவிடக் கூடுத லுண்டோ ? 1
- வயலிடைச் செங்நெல்; வழியெலாம் பூக்கள் ;
- மதகிடைப் புதுப்புனல் ஓசை;
- பெயலிடை பட்ட கழையெலாம் கணுக்கள் ;
- பின்னிய கூந்தலில் முல்லை ;
- அயலிடைத் தோப்புக் கிளையெலாம் கனிகள் ;
- அரிவையர் கையெலாம் கரும்பு ;
- மயலிடைப் பட்ட காளையர் நெஞ்சில்
- வாழ்த்தொலி வாழிய பொங்கல்! 2
- பொன்னென எங்கும் மலைப்பொதி சம்பா
- பூசுணி மாபலா வாழை
- மன்னிய இல்லம்; வாழிய பொங்கல்!
- மங்கையர் உளத்தினில் இன்று
- ’தென்னவர்: ஆம்; நாம் ! திராவிடர்; அஞ்சாச்
- சிறப்புடை மக்களாம்! என்ற
- பின்னிய நினைப்பு வளர்ந்தது; வாழ்க !
- பிறிதினி அடைவது நாடே! 3
51