பக்கம்:பொன் நாணயம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான் இதற்குள் ஏதேதோ எண்ணி மகிழ்ந்தேனே! அந்தப் போலீஸ் உத்தியோகஸ்தன் இதை எப்படியோ தெரிந்துகொண்டானே !--ஆ! அந்தப் பாவி, என்னை என்னென்ன பாடு படுத்துவானோ!--ஐயோ! நான் என்ன செய்வேன் ! கடவுளே, நீயே என்னைக் காப்பாற்ற வேண்டும்'.

இவ்விதம் நான் ஏதேதோ என் மனதிற்குள் சொல்லிக்கொண்டேன். அப்போது என் எசமானரும், அந்தப் போலீஸ் உத்தியோகஸ்தனும் வெளியே வந்தார்கள். அவர்கள் இருவரும் அங்கேயும் சிறிது நேரம் ஏதோ இரகசியமாகப் பேசிக்கொண்டார்கள். பிறகு அவன், அவரை விட்டுப் பிரியும்போது, 'ஐயா, நான் சொல்லியது தங்கள் கவனத்தில் இருக்கட்டும்,' என்றான். அதற்கு என் எசமானர்,

25

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_நாணயம்.pdf/26&oldid=1315383" இலிருந்து மீள்விக்கப்பட்டது