பக்கம்:பொன் விலங்கு.pdf/434

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 பொன் விலங்கு

புறப்படுவதற்குமுன் நீங்க்ள் என்னைச் சந்தித்திருந்தால் உங்களையும் என்னோடு காரில் வரச்சொல்லி வற்புறுத்தியிருப்பேன். இந்தக் கடிதத்தில் மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றை உங்களுக்குத் தெரிவிக்கப் போகிறேன். பல விதங்களில் நவபாரத்துக்குத் தொண்டு செய்யும் தொண்டர்களையும், பிரமுகர்களையும் கெளரவித்துப் பாரதக் குடியரசுத் தலைவர் விருதுகள் வழங்குகிறாரல்லவா? இந்த ஆண்டு வழங்கப்போகிற விருதுகளில் தென்னிந்தியாவிலேயே சிறந்த கலைக்கல்லூரியைச் சிறந்த சூழ்நிலையில் மிகச் சிறந்த விடுதிகளுடன் நடத்தி வருகிற எனக்கும் ஒரு கெளரவம் கிடைக்கப் போகிறது.

உங்களுடைய கல்லூரி அதிபர் அடுத்த வாரம் விஜயதசமி நாளிலிருந்து 'பத்மபூரீயாகி விடுவார். இந்தச் செய்தியை அதிகார பூர்வமாக அறிவிக்கும் தந்தி நேற்றிரவுதான் டில்லியிலிருந்து எனக்குக் கிடைத்தது. இன்று மாலையோ அல்லது நாளைக் காலையோ செய்தித் தாள்களிலும் இச் செய்தி வெளிவந்து விடும். நானும் என் மகள் பாரதியும் இன்று பகல் இங்கிருந்து காரில் புறப்பட்டு இன்று மாலை அல்லது இரவு மதுரைக்கு வந்துவிடுவோம். நாளை மாலை மதுரையிலிருந்து விமானம் மூலம் சென்னை சென்று அங்கிருந்து இரவு விமானத்தில் உடனே டில்லிக்குப் புறப்படலாம் என்று திட்டம் போட்டியிருக்கிறேன். மதுரைக்கு வருகிற வழியில் நிலக்கோட்டையிலும், சோழவந்தானிலும் சில வியாபார நண்பர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு வரவேண்டியிருப்பதனால் நான் எந்த நேரத்தில் சரியாக மதுரைக்கு வந்து சேருவேன் என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் நான் மதுரையில் தங்குகிற பிரமுகருடைய பங்களாவின் விலாசத்தைக் கீழே குறிப்பிட்டிருக்கிறேன். இன்றிரவு ஏழு மணி சுமாருக்கு உங்களை அங்கே எதிர்ப்பார்க்கிறேன். அல்லது நாளைக்குக் காலையிலாவது கட்டாயம் வந்து சந்தியுங்கள். எப்படியும் நான் டில்லிக்குப் புறப்படுமுன் உங்களை அவசியம் பார்த்துப் பேசியாக வேண்டும்..." என்று ஆங்கிலத்தில் சுருக்கமாக எழுதப்பட்டிருந்த அந்தக்கடிதத்தில் இறுதிப்பகுதியில் அது முழுவதும் காரியக் கடிதம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/434&oldid=595679" இலிருந்து மீள்விக்கப்பட்டது