பக்கம்:பொன் விலங்கு.pdf/473

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 471

"இன்றைக்கு மட்டும் உன்னுடைய கொள்கைகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிடு. நீ நம் வீட்டில் கண்டிப்பாக இன்று பாயசம் சாப்பிட்டாக வேண்டும் சத்தியம்! மாட்டேனென்று பிடிவாதம் பிடித்தால் சும்மா விடமாட்டேன். இன்று என்னுடைய பிறந்தநாள்' என்று நண்பன் வற்புறுத்தியபோது, 'இலை போடுவதற்கு முன்பே சொல்லி விடுகிறேன். நிச்சயமாக நான் பாயசம் சாப்பிடமுடியாது' என்று மறுத்தான் சத்தியமூர்த்தி. ஒரு மணிக்குமேல் இலை போட்டுப் பரிமாறி சத்தியமூர்த்தியும் நண்பனும் அவனுடைய தங்கையும் சாப்பிட உட்கார்ந்தார்கள். இலையில் உட்காருவதற்கு முன் வானொலியை இலங்கையிலிருந்து பகல் நேரத்துச் செய்தி கேட்பதற்காகத் திருச்சிக்கு மாற்றி விட்டு உட்கார்ந்தான் நண்பன்.

வானொலியில் பகல் நேரத்துச் செய்திகள் சொல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர்கள் சாப்பிடத் தொடங்கியிருந்தார்கள். பாதிச்சாப்பாட்டின்போது அவர்கள் கவனத்தை இழுத்து எதிர்பாரத அதிர்ச்சியளிப்பதாக அந்தத் துயரச் செய்தி வானொலியிலிருந்து ஒலித்தது. -

'நேற்றிரவு சென்னையிலிருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் வைகவுண்ட் விமானம் நாகபுரியிலிருந்து டில்லிக்குச் செல்லும்போது இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. பதினைந்து பிரயாணிகளும், ஐந்து விமான ஊழியர்களும் இந்தவிமானவிபத்தில் மாண்டு போனார்கள் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். நீங்கள் கேட்பது அகில இந்திய ரேடியோவின் செய்தி அறிக்கை."- -

திடீரென்று இருந்தாற் போலிருந்து இடிவிழுந்த மாதிரி ஒலித்தது இந்தச் செய்தி. - -

நடுச் சாப்பாட்டில் வானொலிச் செய்தியைக் கேட்டுச் சத்தியமூர்த்தி அப்படியே அதிர்ந்து போய்ச் சிலையாய் அமர்ந்துவிட்டான். பூபதி மதுரையிலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட நேரம், சென்னையிலிருந்து டில்லிக்குப் புறப்படும் இரவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/473&oldid=595722" இலிருந்து மீள்விக்கப்பட்டது