பக்கம்:பொன் விலங்கு.pdf/533

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 531

விளக்கிக் கொண்டிருந்தான். போலீஸ்காரர்களையும், இன்ஸ்பெக்டரையும் வரவேற்ற குமரப்பனிடம் அவர்கள் தாங்கள் அங்கே வந்திருக்கும் காரியத்தைச் சொன்னபோது, "இது என்ன ஐயா அநியாயப் பழியாயிருக்கிறது? நேற்றிரவு ஒன்பது மணியிலிருந்து என் நண்பன் சத்தியத்தோடு நான் இதே அறையில்தான் விடிய விடிய இருக்கிறேன். அவன் எப்படி இங்கிருந்து ஹாஸ்டலுக்கு வந்து மாணவர்களைக் கூரை ஷெட்டிற்கு நெருப்பு வைக்கும்படித் தூண்டியிருக்க முடியும்? அவன்தான் என்னோடு இங்கேயே இருந்தானே?" என்று போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் குமரப்பன் வாதாடினான். இன்ஸ்பெக்டரோ சத்தியமூர்த்தி மாணவர்களைத் தூண்டி நெருப்பு வைக்கச் சொல்லியதற்குச் சாட்சிகள் இருப்பதாகக் கூறினார். குமரப்பனும், போலீஸ் இன்ஸ்பெக்டரும் வாதாடிக் கொண்டிருக்கும்போது சத்தியமூர்த்தியே பல்விளக்கி முகம் கழுவிக்கொண்டு குளியல் அறையிலிருந்து வெளியே வந்து

விட்டான்.

49

தங்களுடைய சொந்தப் பலத்தை நியாயத்துக்கு எதிராகவும் கூடப் பரிசோதித்துப் பார்க்க வேண்டு மென்கிற ஆசை உள்ளவர்களால் வெற்றி கிடைக்கிறவரை சூதாட்டத்தைப் போன்ற அந்த ஆசையை இழக்கவே முடியாது.

இன்ஸ்பெக்டர் சத்தியமூர்த்தியை "அரெஸ்ட் செய்து கொண்டுபோக வந்திருப்பதாய்க் கூறினார். "என்ன காரணத்துக்காக என்னை அரெஸ்ட் செய்ய வந்திருக்கிறீர்கள்?' என்று சிறிதும் பதறாமல் நிதானமாக அவரை வினவினான் சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் காரணத்தைக் கூறியபோது, "நீ விவரந் தெரியாம நெருப்போடு விளையாடிக்கிட்டிருக்கிறே! உன்னை உள்ளே தள்ளிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/533&oldid=595789" இலிருந்து மீள்விக்கப்பட்டது