நா.பார்த்தசாரதி 683
முகமோ வந்து தெரிந்து அவனைத் தயங்க வைத்தது. கண்ணும் மனமும் கலங்கியபடியே கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு “ஸாரி ஐ ஆம் இன் நோ மூட்டு ஹேவ் ஸ்வீட்ஸ், மை லைஃப் ஹாஸ் பிகம் ஸச் அஸ் நாட் டு திங்க் ஆப் ஸ்வீட்" என்று தளர்ந்த குரலில் அவன் கூறினான். எக்ஸ்க்யூஸ் மீ என்று சொல்லிவிட்டு விமான நங்கை அடுத்த பிரயாணியை நோக்கி நகர்ந்தாள். விமானம் புறப்பட்டது.
அந்த மன நிலையில் விமானத்தில் பக்கத்திலிருப்பவர் தன்னிடம் பேச்சுக் கொடுக்காமலிருப்பதற்காகக் கையோடு கொண்டு வந்திருந்த நவநீத கவியின் புதிய கவிதைத்தொகுதியான 'மானnகநினைவுகள் என்ற புத்தகத்தைப் பிரித்தான்சத்தியமூர்த்தி.
காம்பிற் பூத்து மண்ணடைந்தாள்-ஒரு கைபடாத தெய்வ மலரானாள். கண்ணாடி மேனிப்
பண்ணாரும் மணிமொழியாள் ஆம்பல் மணக்கும்
அரவிந்த மதி முகத்தில் ஓங்கி நிமிர்ந்து
உலகளக்கப் பளபளக்கும் உல்லாச மோகனச்
சல்லாபத் திருவிழியாள் கள்ளாடு மனமலர்கள்
தள்ளாடிச் சரிந்துபுறம் கொள்ளாத கருங்குழலாள்
விங்கித் தணிந்த விணைத் தண்டொப்பத்
தாங்கிச் சரிந்த சிறு தமனிய முழந்தாளில்
சரிகைத் துணியாடத் தரையாடும் சிறடியாள்
ஏங்கியுருகக் கண்பார்க்கும் இனியபார்வை நலமுடையாள்