பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி. 177 விழாவுக்கு அழைப்புக் கொடுப்பதற்கு வந்திருந்தார். வந்திருந்தவரைச் சுதர்சனனுக்கு அறிமுகப்படுத்தி வைத் தான் ரகு. .. - - - இவர்தான் குமாரி. சுகுணவல்லி. நியூவேவ் கதா ஒரியர்-என்று அவரது பெயரை ரகு சுதர்சனனுக்குச். 'சொல்லியவுடன், , .” மீசை முளைச்ச ஆம்பிளையைக் காட்டிக் குமாரி சகுணவல்லீன்னு சொல்றியேப்பா? இதென்ன ப் பா புதுமை'- என்று சுதர்சனன் கேட்டான். ---- பேர் மட்டுமென்னர் எவ்லாமே புதுமைதான்? இந்த மாதிரிப் பெண் பேருக்கு ஒரு தனிக் கவர்ச்சி இருக்குப்பா. பேருக்கு முன்னாலே குமாரின்னு போடறதாலே அந்தக் கவர்ச்சி இன்னும் அதிகமாகுது'- என்று விளக்கத் தொடங்கிய ரகுவை முந்திக்கொண்டு அந்தக் கதாசிரியரே தன்னைப் பற்றிச் சொல்லி அளக்கத் தொடங்கினார் "ஆம்பளை கொஞ்சம் "லவ் மேட்டர் எழுதினாலே விழுந்து விழுந்து படிப்பாங்க சார்! பொம்பளை-அதுவும் கலியாணமாகாத பொம்பளை இதெல்லாம் இப்பிடி எழுத றான்னா-ஹாட்கேக்ஸ் மாதிரி விற்பனை ஆகும்.' . 'இதெல்லாம்னா எதெல்லாம்?" ; : * . அதான்சார் லவ் மேட்டர்' " லவ் மேட்டர்னா அப்படி என்னதான் சார் எழுது விங்க:தமிழிலேயே விளக்குங்களேன்.தெரிஞ்சுக்கலாம். சில விஷயங்களுக்கு இங்கிலிஷ் ஒரு போர்வுை மாதிரி சார். நடுக்கம் இல்லாமே..குளிர் இல்லாமே அப்படியே கூசாமச் சொல்ல முடியும். செக்ஸ், லவ், அது இதுன்னு இங்கிலீஷ்லேயே சொல்றது. அதுக்காகத்தான். தமிழிலே காதல், காமம்னு சொன்னா ஒரு "கிக் இருக்காது.' ; ஓகோ அதுவும் அப்படியா?-என்று கேட்டுவிட்டு அழைப்பிதழைப் பிரித்துப் பார்ப்பதில் முனைந்தான் சுதர்சனன், . - --