பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 189 -என்று சுதர்சனன் சிறியதும் ரகு ஏதும் மேற்கொண்டு எதிர்த்துப் பேசாமல் பெட்டிப் பாம்பாக அடங்கிப் போய் விட்டான். - 24 கபிரசாரமான விவாதங்களுக்குப் பின்னர் வந்திருந்த பேராசிரியரையும் அவருடைய மனைவியையும் அழைத்துக் கொண்டு சிண்டிகேட் சிதம்பரநாதனைப் பார்க்கப் போனான் ரகு. - - . - х - 'இந்த மாறுதல் விஷயமாக் கவனிக்க வேண்டியது. டைரக்டரேட் ஆஃப் காலேஜியேட் எஜுகேஷன்ஸ்-ஆபீஸ் தான் சிண்டிகேட்டோ, யூனிவர்ஸிடியோ இதிலே எதுவும் பண்ண முடியாது’’-என்று புறப்படும்போதே தயங்கினாற் போலச் சொன்னார் வந்தவர். . . ; - "நம்ம சிண்டிகேட் சாரைச் சாதாரணமா நெனைக்கா தீங்க. அவராலே முடியாததுன்னு எதுவுமே இல்லை. டைரக்டரேட் ஆஃப் காலேஜியேட் எஜுகேஷன் ஆபீஸ்லி யும் அவர் யாரையாவது பிடிச்சு வச்சிருப்பாரு. எதுக்கும் அவரை முதல்லேயே பார்த்துட்டோம்னா நல்லது' என்று. ரகு கூறியதும் வந்தவரும் அவர் மனைவியும் தட்டிச் சொல் லாமல் அவனோடு உடன் புறப்பட்டார்கள். - "இன்னிக்குக் காமர்ஸ் சுப்பையன் வர மாட்டாரு! விவு. அதனாலே பி.காம். ஸ்டூடண்ட்ஸ் வந்தா வே ற எங்கே யாச்சும் உட்கார்ந்துக்கச் சொல்லுங்க. இல்லாட்டி வீட்டுக் குப் போகச் சொல்லிடுங்க...' என்று போகிற போக்கில் ரகு சொல்வியதைக் கேட்டுச் சரி என்பது போல் தலையை ஆட்டினான். சுதர்சனன். . - காமர்ஸ் ஆசிரியர் சுப்பையனுக்குச் சொந்தமாக வண்ணாரப் பேட்டையில் ஒரு டைப்ரைட்டிங் இன்ஸ்டி டியூட் இருந்தது. அதையும் நடத்திக் கொண்டேதான்