பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 4 பொய்ம் முகங்கள் மருந்தாற்றுப்படுத்துநர் வெளியூர் சென்றுள்ளார். இனி மறுபடியும் அவரைக் காணப் பத்து நாட்கள் வரை ஆகலாம்'- -

  • மெடிகல் 'ரெப்ரெலெண்டிடிவ்'ங்கிறத்துக்கு "மருந் தாற்றுப்படுத்துநர்:ங்கிறது. அவ்வளவு சரியான மொழி பெயர்ப்பாப் படவீங்களே...?' - - *

"யானறிந்த வரையில் அதுவே பொருத்தமான தமிழாக்கம். எம் வழிகாட்டி பண்டாரகர் படுமலையூர்க் கடுமழைக் கண்ணனாரே ஒப்புக் கொண்ட மொழிபெயர்ப்பு அது’’- . . . . . - , - х - இப்பிடி நீங்க ஒரே மொழிபெயர்ப்பாப் பண்ணிக் கிட்டிருந்தீங்கன்னா அப்புறம் மொழி இருக்காது. மொழி பெயர்ப்பு மட்டுந்தான் மீதமிருக்கும்." தமிழுக்காக உயிரையும் விடுவேன். உயிர் வாழ்ந்தால்தானே தமிழைப் படிக்கலாம். போற்றலாம், பாதுகாக்கலாம். உயிரை விட்டுப்போட்டா அப்புறம் இதெல்லாம் யார் செய்யிறது?" - "சூளுரையைக் குறை கூறாதீர்...' "சும்மா எடுத்ததுக்கெல்லாம் சூளுரை கூறிக்கிட்டி ருந்தா அப்புறம் சூளுரைக்கு மரியாதை எதுவும் இருக்காது. என்னையே எடுத்துக்குங்க தம்பி படிக்கிற வங்கிலே , மரியாதை இயக்கத்திலே தீவிரமா இருந்தவன் நான். நாளாகு நாளாகத்தான். 'விஷயங்களை உணர்ச்சி பூர்வமா அனுகியே நமக்குள்ளார முதுகு சொரிஞ்சிக்கிறதிலே பிரயோசனமில்லே. எதையும் அறிவு பூர்வமா-விஞ்ஞான ரீதியா அணுகனும்னு எனக்குப் புரிஞ்சுது. ரொங் அதிக மான கிணத்துத் தவளை மனப்பான்மை நம்மை வளர்க்கவே வளர்க்காது.-- விஞ்ஞானம் என்று கூறாதீர். மெய்யறிவு எனக் கூறுக’