பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 6 பொய்ம் முகங்கள் னுடன் இப்படிக் கருத்து வேறுபாடு கொள்கிறீர்களே?" என்று உடனே தன்னுடைய பேச்சை வேறுவிதமாகத், திருப்பினான் ஆறை அண்ணாதாசன். - 29 தன்னுடைய வாழ்வின் முதிராப் பருவத்து இளமையில் தான் எப்போதோ கொண்டிருந்த ஒரு சார்பை வைத்து தன்னை நிரந்தரமாக இப்படித்தான் இருக்க வேண்டும். இருக்க முடியும் என்று முடிவு செய்துவிட்ட அந்த' இளைஞனைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது சுதர் சனனுக்கு. மாறுதலைப் பற்றியே அவனுக்குப் புரியாது. போல இருந்தது. . வளர்ச்சியும்-மாறுதலும் எவனுடைய வாழ்வில் தென் பட்டாலும் அதை ஒப்புக் கொள்ளவோ புரிந்து கொள் ளவோ முடியாதவனாகத் தோன்றினான் ஆறை அண்ணா தாசன். . . . . . . . « இனவுணர்ச்சிங்கிறதை நீங்க எப்பிடிப் புரிஞ்சுக்கிட்டி ருக்கிங்கன்னு எனக்குத் தெரியாது தம்பீ! .இப்பல்லாம். ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரி அந்த வார்த்தையைப் புரிஞ்சுக்கிறாங்க! வேறே சிலபேருங்க "நம்ம இயக்கத்தைச் சேர்ந்த அத்தினிபேரும் அதை ஒரேவிதமாகத்தான் புரிஞ. சுக்க முடியும்'-னு நம்பறாங்க. திருக்குறளில் ஒரு குறள், பொருட்பால்லே, அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால்’னு தொடங்குது. அதிலே "தங்கணத்தார்’னு ஒரு வார்த்தை வருது. அதுக்குத் தன் இனம்’னு பொருள் கொண்டால் என்ன அர்த்தமோ அந்த அர்த்தம்தான் சரியான இன வுணர்ச்சிக்கு இலக்கணம்னு சொல்லுவேன் நான், - இதைக் கேட்டு ஆறை அண்ணாதாசன் சந்தேகக் கண் களோடு சுதர்சனினை ஏறிட்டுப் பார்த்தான். தன் அது, மானத்திற்கு மேம்பட்டும் தன் கணிப்பிற்கு விலகியும் உள்ள