பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 20 பொய்ம் முகங்கள் நாடகக்கலை. நாடகம், ஸ்டேஜ் டைரக்ஷன் இதிலே எல்லாம்தான் போது போகுது. சினிமா டைரக்டர் ஆகலாம்கிற ஆசையிலே மெட்ராஸ் வந்து பதினேழுவருஷம் ஆகுது. இன்னும் அந்த ஆசை ஈடேறலே...நாடகத்திலே தான் காலந் தள்ள வேண்டியிருக்கு..." . . . ' குடும்பம்...?' .. - "நான் பேச்சலர்...குடும்பம்னு எதுவுமில்லே. அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, தங்கை எல்லாம் நாமக்கல்லே இருக்காங்க...அதான் சொந்த ஊர். நிலையான வருமான மில்லாத இந்தத் தொழிலை நம்பி நான் ஒருத்தி கழுத்திலே தாலி கட்ட முடியும்னு தோணலை. சாட்சாத் சரஸ்வதி கழுத்திலே கட்டிவிட்ட தாலிக்கே இத்தனை சிரமப்பட வேண்டியிருக்கே?" - . 1 யாரு? சரஸ்வதியா?...நீங்களா? இதைக் கேட்டு மதன் குமாரே சிரித்துவிட்டான். "சாருக்கு என்ன பிளின்ஸோ? 'இப்போதைக்கு வேற வேலை தேடறதுதான் பிஸினஸ், முன்னாடி இருந்தது. தமிழ் வாத்தியார் வேலை. அப்புறம் இங்கேதான் ஒரு டுட்டோரியல் காலேஜிலே தமிழ் சொல்லிக் குடுத்துக்கிட்டிருந்தேன். அதை நடத்திக்கிட் டிருக்கிறவருக்கும் எனக்கும் ஒத்து வரலே. வெளியேறிட் டேன். - "அப்டீன்னா நம்ப மதன் ஆர்ட்ஸ் அகாடெமிக்கு ஒரு நல்ல ஹிஸ்டாரிகல் டிராமா எழுதுங்களேன். உடனே அரங்கேற்றி ஜமாய்ச்சுடலாம்...' - 'உங்க ஊரு நாமக்கல்ங்கிறீங்க...பேர்ைப் பார்த்தா யாரோ யூ.பி. - பஞ்சாப்காரன் பேரு மாதிரியில்லே இருக்கு...' அதனாலே என்ன? இந்தக் கலை உலகம் இருக்கே இதுக்குக் குமார்’னு முடியிற மாதிரிப் பேரு ரொம்ப ராசின்னு சொல்லுவாங்க- . . . . . . . -