பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ДБт. பார்த்தசாரதி 233 . அதன் மூலம் தன்னை உயரத்தில் தூக்கி நிறுத்திக் கொள்ளு வதோ நண்பனை அவமதிப்பதாக இருக்குமென்று அவன் நினைத்தான். தன்னை மதிப்பதோடு பிறரை அவமதிக்காம விருப்பதும் சேர்த்துத்தான் சுயமரியாதை என்றெண்ணி, :னான் அவன். - . . - காபி குடித்துக் கொண்டே மதிவாணனிடம் அவன். வேலை பார்த்துக் கொண்டிருந்த பத்திரிகையைப் பற்றி, விசாரித்தான் சுதர்சனன், - - "சேட் ஜம்னாதாஸ் கிஷன் சந்த்னு யாரோ ஒரு வடக் கத்தி ஆள் நடத்தற பத்திரிகைங்க, ஒரு சினிமா வீக்லி, ரெண்டு ஃபாஷன் ஜர்னல், மூணு டெய்லி தமிழ் தெலுங்கு மலையாளம்னு எல்லாத்திலியுமா இருக்கு,அதோட தமிழ்ல ஒரு வீக்லியும் புதுசா ஸ்டார்ட் பண்ணியிருக்காங்க! தமிழ் ஆமணி மாலை'ன்னு பேரு. * .. - "அதுக்கு ஆசிரியர் யாரு?" "காவி-அதான் கா. விஜயராகவன்கிறவரு.' "அதென்ன காவி கமண்டலம்னு என்னென்னவோ. மாதிரிச் சாமியாருங்க விவகாரமாய்ப் பேரெல்லாம். வருது?' * - - "அது காவன்னா விஜயராகவன்கிற முழுப் பேரோட சுருக்கம். சட்னு ஜனங்க ஞாபகத்திலே இருக்கிற மாதிரி வரணும் பாருங்க...அதான்...' . . . . . . . நீங்க எப்பிடி இதிலே போய்ப் புகுந்தீங்க?...எங்கே யாவது: ஹைஸ்கூல்லே தமிழ்ப் பண்டிட்டா இருப்பிங்கன் னில்லே நினைச்சேன்?...சாய்ஞ்சாச் சாயிற பக்கமே சாயிற மாடுங்க மாதிரிப் புலவர், வித்துவான். பண்டிதர்களை அமாதிரித் தமிழ்ப் பட்டதாரிகளை எல்லாம் தமிழ் வாத்தியார் வேலைக்குத் தவிர வேறெதுக்கும் நுழைய விடாம. வச்சிருக்கிற நாட்டிலே தான் நாம வசிக்கிறோம். ஆனா அடிக்கடி நாட்டை ஆளர கட்சிக்காரங்க யாருன்னாலும்