பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 29 நோக்கி முகமலர்ந்து கைகூப்பினார் இளவழகன். பலராம் நாயுடு பதிலுக்கு முகமலரவோ கைகூப்பவோ செய்யாமல் கடுமையாக இருந்தார். - இன்னும் தலைமை ஆசிரியர் இளவழகனை உட்காரச் சொல்லவில்லை. நிற்க வைத்தே விசாரணை தொடர்ந் திது . - - "நீங்க இவர் பெண்ணுக்கு ஏதாவது புஸ்தகம் கை கயெழுத்துப் போட்டுக் குடுத் தீங்களா?' , "இவர் பொண்ணுன்னா யாரு பேர் சொன்னர்த் தான் எனக்குத் தெரியும்?’’ - . - :பி. நாச்சி யார்.' X- “storihi குடுத்தேன், வகுப்பிலே மாணவ மாணவி களின் திறமைக்கு ஒரு போட்டி வ்ைத்து என் கேள்விக்குச் சரியாகப் பதில் சொல்லிய இவர் மகளுக்கு அந்தப் பரிசைக் குடுத்தேன்...” - "என்னன்னு எழுதிக் குடுத்தீர்?" 'இப்போ ஞாபகமில்லை." . 'அன்புள்ள நாச்சியாருக்குன்னு எழுதினீரா?" "இருக்கலாம்! அப்படி எழுதியிருந்தா அதிலே என்ன தப்பு?’’ அடி செருப்பாலே செய்யறதையும் செஞ்சிப்புட்டு என்ன தப்புன்னாடா கேட்கிறே. ஒரு சமைஞ்ச பொண்ணுக் குப் படிப்புச் சொல்லிக் கொடுக்கிற வாத்தியாரு என்னடா பரிசு கொடுக்கிறது? கன்னியின் முத்த மாடா ராஸ்கல்” என்று தலைமையாசிரியரை மீறிக்கொண்டு எழுந்து நின்று கையை ஓங்கியபடி கூப்பாடு போட்டார் பலராம் நாயுடு. இளவழகன் இதை எதிர்பார்க்கவில்லை. "நீங்க கொஞ்சம் பண்பா மரியாதையாப் பேசினா நல்லதுங்க." ... " x -