பக்கம்:பொய்ம் முகங்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& G - பொய்ம் முகங்கள் மொடை இல்லை'-என்று முகத்திலடித்தாற் போல் பதில் சொல்லிவிட்டான் சுதர்சனன். - இந்து விவகாரம் இப்படி இருக்கும்போது அன்று பகலில் மாவட்டத் தமிழாசிரியர் கழ்கத்தலைவரும், செய லாளரும், பள்ளிக்கூடத்துக்குத் தேடி வந்திருந்தார்கள். வருடாந்தர மகாநாட்டை நடத்துவதற்கு யோசனை கேட்டும் நிதி வசூல் தேடியும் அவர்கள் புறப்பட்டு வந்திருந் தார்கள். சுதர்சனன் தன்னால் முடிந்ததைக் கொடுத்தான். பிச்சாண்டியா பிள்ள்ையும் ஏதோ பின்னால் தருவதாக வாக்குறுதி கொடுத்தார். 'வருஷாந்தர மாநாட்டிலே மறந்து டாமல் பட்டிமண்டபம் ஒண்ணு போடணும்னு குறிச்சுக்குங்க்-' என்று அரிய யோசனை ஒன்றையும் இலவசமாக வழங்கினார் பிச்சாண்டியாபிள்ளை. பருப்பில்லாமல் கலியானமா? பட்டிமண்டபம் நிச்சயம் உண்டுங்க. ஆனா என்ன தலைப்பிலே போடற துன்னுதான் யோசிச்சிக்கிட்டிருக்கோம்' "தமிழாசிரியன் முன்னேற உட்பகை அதிகமா, வெளிப் பகை அதிகமான்னு போடுங்களேன்-என்றார் பிச்சாண் டியாபிள்ளை! - е . இந்த மாதிரித் தலைப்பைவிட நமக்கு வேறே அவ :மானமே வேண்டியதில்லே- என்று சுதர்சனனும் மறைக் காம்ல் தன் கருத்தைச் சொல்லி வைத்தான். "நீங்க சும்மா போடுங்க! சுதர்சனத்துக்குப் பட்டி மண்டபம்னாலே, பிடிக்காது. அதுதான் அப்படிச் சொல் றாரு-என்றார் பிச்சாண்டியா பிள்ளை. - நீங்க சொல்றபடியே எல்லாம் செய்யலாம் ஐயா உங்களாலே ஒரு காரியம் ஆகணும். ரெண்டு நாள் இம்ாநாட்டுக்கு நாலு வேளைச் சிற்றுண்டி, நாலு வேளைச் சாப்பாடு ஆகுது. இது தவிரப் பந்தல், போஸ்டர். அழைப் பிதழ் அச்சிடப் பிரஸ் செலவுகள் எல்லாம் வேற இருக்கு. நிறைய டொனேஷன்ஸ் எதிர்பார்க்கறோம். நீங்ககூட