பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15


வேண்டும். ஆளைச் சுற்றிலும் எல்லா பொருட்கள் இருக்கவேண்டும்.

10 அடி தூரத்திற்கு அப்பால் ஒரு நேர்க்கோடு போட்டு பங்கு பெறும் அத்தனை பேரும் நின்று கொள்ள வேண்டும். விசில் ஒலிக்குப் பிறகு, பூதம் காக்கும் புதையலை நோக்கி, இவர்கள் புறப்பட வேண்டும்.

மல்லாந்து படுத்திருக்கும் பூதம் ஆனவர். தனது கண்களை இறுக்க மூடிக்கொண்டு, அனசயாமல் படுத்திருக்க வேண்டும், அதே சமயத்தில் புதையல் எடுக்க வருபவர்களும், சத்தமில்லாமல் மெல்ல மெல்ல அடியிட்டு நடந்துவரவேண்டும். பூதம் காக்கின்ற புதையலை கடத்திக் கொண்டு வரப் போகிறவர்கள் அல்லவா அவர்கள்!

ஒரு சில வினாடிகள் கழிந்ததும், பூதமானவர் தனது கண்களை மெதுவாக விழித்துப் பார்க்க வேண்டும். தலையை அங்குமிங்கும் திருப்பவும் செய்ய லாம். அவர் விழியைத் திறந்து பார்த்தவுடனேயே நடப்பவர்கள் அனைவரும், அப்படியே அசையாமல் சிலைபோல நின்றுவிட வேண்டும்.

பூதம் பார்ப்பதைப் பார்க்காமல் மேலும் நடப்பவர்களும், சிலை போல நிற்க முயற்சித்து அசைந்து கொண்டிருப்பவர்களும், தவறிழைத்தவர்கள் என்று கருதப்பட்டு, ஆட்டத்தை விட்டு வெளியேற்றப்படுவார்கள்.