இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
56
விளையாட்டுக்குரிய விதிகள் : .
1- ஆட்டத்தில் ஒடத் தொடங்குபவர் தன்னிடம் உள்ள மெழுகுவர்த்தியை எரியவிட்ட பிறகே ஒடத் தொடங்க வேண்டும். - -
2. இடை வழியிலே மெழுகுவர்த்தி அணைந்து போனல்கூட, திரும்பவும் பற்ற வைத்துக்கொண்டு. அணைந்த இடத்திலிருந்தே மீண்டும் ஓடவேண்டும்.
3. தனியே வைக்கப்பட்டிருக்கும் மெழுகுவர்த்தி நன்றாக ஏற்றப்பட வேண்டும். எரியும்போது அணைத்துவிட்டு ஓடி வரலாம். -
4. திரும்ப ஓடிவரும் பொழுது தன்னிடம் கையில் இருக்கும் மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. - -
5. யாரையும் ஏமாற்ற முயலாமல் விளையாட்டை மதித்து விளையாடினால் ஆட்டம் விறுவிறுப்புடனும் உற்சாகத்துடனும் அமையும்.
6. அணைந்து போகும் மெழுகு வர்த்தியைப் பொருத்த, யாரும் யாருக்கும் உதவி செய்யக் கூடாது. அவரவரேதான் எரியவிடவேண்டும்.