பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56


விளையாட்டுக்குரிய விதிகள் : .

1- ஆட்டத்தில் ஒடத் தொடங்குபவர் தன்னிடம் உள்ள மெழுகுவர்த்தியை எரியவிட்ட பிறகே ஒடத் தொடங்க வேண்டும். - -

2. இடை வழியிலே மெழுகுவர்த்தி அணைந்து போனல்கூட, திரும்பவும் பற்ற வைத்துக்கொண்டு. அணைந்த இடத்திலிருந்தே மீண்டும் ஓடவேண்டும்.

3. தனியே வைக்கப்பட்டிருக்கும் மெழுகுவர்த்தி நன்றாக ஏற்றப்பட வேண்டும். எரியும்போது அணைத்துவிட்டு ஓடி வரலாம். -

4. திரும்ப ஓடிவரும் பொழுது தன்னிடம் கையில் இருக்கும் மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. - -

5. யாரையும் ஏமாற்ற முயலாமல் விளையாட்டை மதித்து விளையாடினால் ஆட்டம் விறுவிறுப்புடனும் உற்சாகத்துடனும் அமையும்.

6. அணைந்து போகும் மெழுகு வர்த்தியைப் பொருத்த, யாரும் யாருக்கும் உதவி செய்யக் கூடாது. அவரவரேதான் எரியவிடவேண்டும்.