பக்கம்:பொழுதுபோக்கு விளையாட்டுக்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61



யால் கட்டிவிட வேண்டும். மிகமிக நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்றால், தாமாகவே கண்களை மூடிக்கொண்டு, மறு உத்தரவு கிடைக்கும் வரை கண்களைத் திறக்காமலேயே விளையாட வேண்டும். .'

இனி ஆட்டத்தைத் தொடங்கலாம். ஆட்டத்தை நடத்துபவர், விசில் ஒலிமூலம் அனுமதி கொடுத்தபிறகு, தயாராக வைத்திருக்கும் பொருட்களில் ஒன்று ஒன்றாக ஒருவர் மூலம் தர, அதை பக்கத்தில் உள்ளவரிடம் கொடுக்க, இவ்வாறு எல்லா பொருட்களையும் ஒருவர் தன் கையால் வாங்கி வாங்கிப் பக்கத்தில் உட்காரிந்திருப்பவரிடம் கொடுக்கின்ற முழு வாய்ப்பையும் பெற்று விடுவார்.

இவ்வாறு ஏறத்தாழ 20 பொருட்களையும் அல்லது வைத்திருந்த பொருட்கள் அனைத்தையும் ஒருவர் தொட்டு உணர்ந்த பிறகு, விசில் ஒலி மூலம் ஆட்டத்தை முடித்து வைக்க வேண்டும்.

விசில் ஒலி கேட்டவுடன் கண்களின் கட்டை அவிழ்த்து விட்டு தன்னிடம் உள்ள பேப்பரில், தான் தொட்டு உணர்ந்த அத்தனைப் பொருட்களின் பெயர் களையும் எழுதிவிட வேண்டும். -

இதை ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் எழுதித் தந்துவிட வேண்டும். என்ற விதியையும் சேர்த்துக் கொள்ளலாம். -