பக்கம்:பொழுது புலர்ந்தது.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தியடிகளின் உபவாசம் 105

காந்தியடிகள் 21 நாள் உபவாசத்தை யாதொரு இடையூறுமின்றி செய்து முடித்தார் என்று கேட்டதும் ஜனங்களும் சான்றாேரும் அளவில்லாத மகிழ்ச்சி யடைங் தார்கள், ஆகந்தக் கூத்தாடினர்கள், ஆண்டவனுக்கு வந்தன வழிபாடுகள் நடத்தினர்கள். அரசாங்கத்தாரும் அப்பா கடவுள் காப்பாற்றினர், அபாயமுண்டாயிருந்தால் என்னென்ன உற்பாதங்கள் ஏற்பட்டிருக்குமோ என்று எண்ணி நெஞ்சைத் தடவிக் கொடுத்துக் கொண்டார்கள். மகாத்மா உயிர் தப்பியது ஒரு அற்பதமே என்பதில் ஐயமில்லை. அதற்கு அவருடைய ஆத்ம சக்தியே காரணம் என்று அவர் பக்கத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த பிரபல வைத்திய சிகாமணி டாக்டர் ராய் கூறுகிறார். உலகம் இன்று தத்தளித்துக் கொண்டிருக் கும் நிலைமையில் ஆத்மசக்தி போதகர் வேண்டுமே என்று எண்ணித்தான் ஆண்டவன் இந்த அற்புதத்தை நிகழ்த்தி யுள்ளான். இன்னும் காந்தியடிகளால் எத்தனையோ அற்புதங்கள் நிகழும். நாமே பாக்கியசாலிகள்.