பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156 ⚫ போதி மாதவன்

அளித்தான். அவர் அப்புல்லை மரத்தடியில் பரப்பிக் கொண்டு அதன் மீது கிழக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டார்.

அவரோடு வாழ்ந்து வந்த ஐந்து தபசிகளும், அவர் தவத்தின் மூலம் காணும் உண்மையைத் தமக்கும் உரைத்தருளுவார் என்று அதுவரை நம்பிக்கொண்டிருந்தனர். ஆனால் அவர் பட்டினித் தவத்தை முறித்து, உணவு உண்டு விட்டார் என்பதை அறிந்ததும், அவர்கள் அவர் மீது வெறுப்புற்று, அவரைத் தனியே விட்டு விட்டு வேறிடத்திற்குப் போய்விட்டனர்.