பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர் நீங்கு படலம் ⚫ 95

புத்த பகவருடைய வாக்கியங்களிலிருந்து அவருடைய சுய சரித்திரத்தில் சில பகுதிகள் மட்டுமே தெளிவாய்த் தெரிகின்றன. மற்றைப்படி பின்வந்த ஆசிரியர்களும், கவிஞர்களும் எழுதி வைத்த வரலாறுகள். காவியங்களிலிருந்தே சரித்திர விவரங்களை அறிய வேண்டியிருக்கின்றது. இவைகளுக்குள்ளே சில முரண்பாடுகள் இருப்பதும் இயற்கையேயாம்.