பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரண்டாம் அதிகாரம். பௌத்தம் தமிழ் நாட்டில் வளர்ச்சி பெற்ற வரலாறு. பௌத்தமதம வடநாட்டினின்று தென்னாட்டிற்கு எந்தக்காலத்தில் வந்ததென்பதை முன் அதிகாரத்தில் ஆராய்ந்தோம். இந்த மதம் தமிழ் நாட்டில் எவ்வாறு பரவி யது என்பதனை ஈண்டு ஆராய்வோம. இந்த மதம் உலகமெங்கும் பரவுவதற்குக காரணமா யிருந்தது சஙகம். • சங்கம்' என்றால் பௌ தத பிக்ஷக் களின கூட்டம். பௌத்த மதத்தில் மும்மணி' என்று சொல்லப்படும் புதத, தன்ம, சங்கம் என்னும் மூன்றனுள் இம்மதததின உயிர்நிலையாயிருந்தது சங்கமே. சங்கத்தின். அங்கத்தினரான தேரர்கள் காரிடக்குஞ் சென்று பெளத்த தர்மததை (கொள்கையைப் பாவச் செய்தபடியால், இந்த மதம் அந்தந்த நாட்டுமக்களால் மேற்கொள்ளப்பட்டு மேலோங்கி நின்றது. புததர் நிர்வாணம் அடைந்த பிறகு, அவரைப் பின் பற்றியொழுகிய பிக்ஷக்கள் பற்பல நாடுகளிலும் சென்று இம்மதக்கொள்கையைப் பாவச்செய்தது போலவே, தமிழ் தாடடிலும் வந்து, கேரம் கிராமம் என்னும் வேறுபாடின்றி எல்லாவிடங்களிலும் தமது மதக்கொள்கையைப் போதிப் பதையே தமது வாழ் நாட்களின் குறிக்கோளாகக் கொண்டி ருந்தார்கள. தமிழ நாட்டில் ஆங்காககிருந்த அரசர், வணி கர், செல்வந்தர் முதலானவர்களின பொருளுதவி பெற்று விகாரைகளையும், பள்ளிகளையும், சேதியங்களையும், ஆராமங் களையும் ஆங்காங்கே நிறுவினார்கள். மடங்களில் வாழும்