பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



மூன்றாம் அதிகாரம். பௌத்தமதம் மறைந்த வரலாறு. பௌத்தமதம் தமிழ், நாட்டில் வந்த வரலாற்றினையும், அது பாவி வளர்ச்சியடைந்த வரலாற்றினையும், மேலே இரண்டு அதிகாரங்களில் ஆராய்ந்தோம். செல்வாக்குப் பெற்றுச் சிறப்படைந்திருந்த அந்த மதம் பிற்காலத்தில் எவ்வாறு மறைந்துவிட்டது என்பதை இங்கு ஆராய்வோம், பௌத்தம் தமிழ்நாடு வந்த காலத்திலவேறு வடநாட்டு மதங்களும் இங்கு வந்து சோந்தன, அவை ஆருகதம எனப்படும் ஜைன மதமும, பிராமண மதம் எனப்படும் வை தீக மதமும், பூரணன் என்பவரை வழிப்பட்டொழுகும் ஆசீவக மதமும் என்பன. (ஆசீவக மதத்தைப்பற்றி இரண்டாம் தொடர்புரையில் காணக.) இந்த மதங்கள் வட நாட்டில் தோன்றியவை. பௌத்த மதத்தை உண் டாக்கிய சாக்கிய புத்தரும், ஜைன மதததையுணடாக்கிய வர்த்தமான மகாவீரரும், ஆசீவக மத தகையணடாக்கிய கோசால மற்கலிபுத்திரரும ஒரே காலத்தில் உயிர்வாழ்க் திருந்தவராவர். இந்த மதங்கள் உண்டான காலத்திலே வைதீக மதமும் இருந்தது. இந்த நான்கு வடநாட்டு மதங் களும் கி. மு. மூன்றாம் நூற்றாண்டிலே தமிழ் நாட்டிற்கு வந்தன. பௌத்தமதம் அசோக சக்கரவாகதி சாலத்தில் தமிழ் நாட்டில் பாவச்செய்யப்பட்டது என்று அறிந்தோம். ஜைனமதம், அசோக சக்கரவர்ததியின் பாட்டனான சந்திர குப்த அரசன் காலத்தில் தென்னாடு வந்ததாகச் சானறுகள் உள்ளன, சற்றேறததாழ இதே காலத்தில்தான் வைதீக பிராமண மதமும், ஆசீவக மதமும் தமிழ்காட்டிற்கு வந்தி